ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

‘ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவு’ – ஐஸ்லாந்து சர்வஜன வாக்கெடுப்பு முடிவு என்ன?

ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இணைவது குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதா என்பது தொடர்பாக ஐஸ்லாந்தில் நடத்தப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சர்வஜன வாக்கெடுப்பின் ஆரம்ப கட்ட முடிவுகளில், 'ஆதரவு' (Yes) தெரிவிக்கும் தரப்பு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இணைவது குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதா என்பது தொடர்பாக ஐஸ்லாந்தில் நடத்தப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சர்வஜன வாக்கெடுப்பின் ஆரம்ப கட்ட முடிவுகளில், ‘ஆதரவு’ (Yes) தெரிவிக்கும் தரப்பு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.

தகுதிபெற்ற 2,70,000 வாக்காளர்களில் முதற்கட்டமாக எண்ணப்பட்ட 87,000 வாக்குகளின் அடிப்படையில், பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு 51.2 சதவீத வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, 48.8 சதவீதமானோர் இதற்கு எதிராக (‘இல்லை’) வாக்களித்துள்ளனர். எனினும், வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.

வாக்கெடுப்பின் நம்பகமான இறுதி முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்கு பின்னரே தெரியவரும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை இரவு 10 மணிக்கு (2200 GMT) வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தொலைதூர நகரங்கள் மற்றும் கிராமப்புற வாக்குச்சாவடிகளிலிருந்து விமானம், படகு மற்றும் வாகனங்கள் மூலம் வாக்குப்பெட்டிகளைப் பாதுகாப்பாகக் கொண்டுவரும் சிக்கலான பணிகள் தொடங்கப்பட்டன.

முன்னதாக, வெள்ளிக்கிழமை வெளியான கேலப் (Gallup) கருத்துக்கணிப்பில், பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்குச் சிறிய அளவிலான எதிர்ப்பே நிலவுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

இது பேச்சுவார்த்தை ஆதரவாளர்களுக்கு லேசான முன்னிலை இருப்பதாகக் கூறிய ஆரம்பகட்டக் கணிப்புகளிலிருந்து சற்று மாறுபட்டதாக இருந்தது.

உக்ரைன் போர் மற்றும் கிரீன்லாந்து தீவு தொடர்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்து வரும் அச்சுறுத்தல்களால் நிலவும் உலகளாவிய பாதுகாப்பற்ற சூழலில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது நாட்டின் உயர் வட்டி வீதங்களைக் குறைப்பதோடு அதிக பாதுகாப்பையும் வழங்கும் என ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.

இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது நாட்டின் இறையாண்மைக்கும் மீன்பிடி உரிமைகளுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என எதிர்ப்பாளர்கள் வாதிடுகின்றனர்.

பழைய கேள்விகளும் புதிய அவசியமும்

நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, 2009 ஆம் ஆண்டில் ஐஸ்லாந்து முதன்முதலில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விண்ணப்பித்தது. இருப்பினும், 2013 இல் ஆட்சியமைத்த ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு அரசாங்கம் அந்த நடைமுறைகளை நிறுத்தி வைத்தது.

தற்போது மீண்டும் உருவெடுத்துள்ள உலகளாவிய புவிசார் அரசியல் கொந்தளிப்புகள், ஐஸ்லாந்து மக்கள் பல தசாப்தங்களாக விவாதித்து வரும் இந்த விவகாரத்திற்குப் புதிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளன.

வட்டி வீதமும் வாழ்க்கைச் செலவும்

பாதுகாப்பு விவகாரங்களை விட, வட்டி வீதம், மீன்பிடி உரிமைகள் மற்றும் வாழ்க்கைச் செலவு ஆகியவற்றுக்கே ஐஸ்லாந்திற்குள் அதிக முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஐஸ்லாந்து தொடர்ந்து அதிக பணவீக்கத்துடனும், அடமானக் கடன்களை மிகவும் சுமையாக்கும் வட்டி வீதங்களுடனும் போராடி வருகிறது. ஐரோப்பிய மத்திய வங்கியின் வட்டி வீதம் 2.25% ஆக உள்ள நிலையில், ஐஸ்லாந்தின் மத்திய வங்கி வட்டி வீதம் 8.00% ஆக உள்ளது.

எனவே, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதும், யூரோ நாணயத்தை ஏற்றுக்கொள்வதும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் என ‘ஆதரவு’ தரப்பினர் கூறுகின்றனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி