மொன்டானாவில் துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து பற்றி எரிந்த வீடு – பலர் உயிரிழப்பு
மொன்டானாவின் பில்லிங்ஸில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற தீவிபத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் உட்பட அனைவரையும் சட்ட அமலாக்கத் துறை அடையாளம் கண்டுள்ளதாக யெல்லோஸ்டோன் Yellowstone கவுண்டியின் இடைக்கால ஷெரிப் கென்ட் ஓ’டொனெல் Kent O’Donnell குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழந்தவர்களின் பெயர்கள், வயதுகள் அல்லது பிற அடையாள விவரங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
குடும்ப சண்டையின் காரணமாக இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் இன்னும் கண்டறியவில்லை.
மேலும் விசாரணை அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களுக்கு தற்போது எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.




