ஜெர்மனி ரயில் நிலையத்தில் கத்தி குத்து தாக்குதல் – பெண் உயிரிழப்பு
ஜெர்மனியில் உள்ள ரயில் நிலையமொன்றில் பிரித்தானிய பெண் ஒருவர் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 12.50 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
பெயர் குறிப்பிடப்படாத குறித்த பெண் ஆஸ்திரியாவுடனான எல்லைக்கு அருகிலுள்ள ரோசன்ஹெய்ம் Rosenheim ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த சந்தர்ப்பத்தில் கத்தி குத்துக்கு இலக்காகியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஜெர்மனியை சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பவேரிய காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.




