ஒரேஒரு புகைப்படம் – ஈரானில் பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதிப்பு
ஈரானில் ஜனவரி மாதம் நடந்த போராட்டங்களின் போது, தீப்பற்றி எரிந்த ஒரு கடையைப் புகைப்படம் எடுத்ததமைக்காக பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
‘கடவுளுக்கு எதிராகப் போர் தொடுத்தல்’ என்று தோராயமாக மொழிபெயர்க்கப்படும் ‘மொஹாரெபே’ என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லைலா அபோல்ஹசானி Leila Abolhasani என்ற 43 வயதுடைய தாய் ஒருவரே இவ்வாறு மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.
கடந்த ஏழு மாதங்களாக தீவைப்பு குற்றச்சாட்டின் கீழ் அவர் சிறை தண்டனை அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.




