ஆங்கிலக் கால்வாயில் மூழ்கிய மீன்பிடிக் கப்பல் – இருவர் மாயம்
ஆங்கிலக் கால்வாயில் நேற்று மீன்பிடிக் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் இருவர் மாயமாகியுள்ள நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கை தொடர்வதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
குறித்த படகில் 05 பேர் பயணித்த நிலையில் அவர்களில் மூவர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விபத்துக்குள்ளான கப்பல் மற்றும் விபத்துக்கான காரணங்கள் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




