எல்லைகள் குறித்து பேச்சுவார்த்தை – தைவானைச் சுற்றி கடற்படையை குவிக்கும் சீனா
தைவானைச் சுற்றியுள்ள பகுதிகளில் சீனா தனது கடற்படையை குவித்து வருவதாக தெரியவந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக உச்சம் தொட்டுள்ள துருப்புகளின் எண்ணிக்கை குறைவடைவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தைவானுக்குக் கிழக்கே உள்ள கடற்பரப்பில் கடல் எல்லைகள் குறித்து பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதாக டோக்கியோவும் மணிலாவும் மே மாத இறுதியில் அறிவித்ததைத் தொடர்ந்து சீனா துருப்புக்களை குவித்து வருகிறது.
ஆகஸ்ட் மாதத்தின் முதல் 24 நாட்களில் மட்டும், பிரதான நிலப்பரப்பு கடலோரக் காவல்படை, ஆய்வு மற்றும் பிற அதிகாரப்பூர்வ கப்பல்களை மொத்தம் 118 முறை கண்காணித்துள்ளதாக தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.




