ஆஸ்திரேலியா , சிட்னி விமான நிலையத்தில் தரைப்பகுதியில் (Tarmac) விமானங்களின் போக்குவரத்தில் ஏற்பட்ட மேலும் ஒரு குழப்பம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

சிட்னி விமான நிலைய பாதுகாப்பு கேள்விக்குறி? 3 வாரங்களுக்குள் 4ஆவது அசம்பாவிதம்

  • August 21, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா , சிட்னி விமான நிலையத்தில் தரைப்பகுதியில் (Tarmac) விமானங்களின் போக்குவரத்தில் ஏற்பட்ட மேலும் ஒரு குழப்பம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த மூன்று வாரங்களுக்குள் இடம்பெறும் நான்காவது சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு மேல், கோல்ட் கோஸ்ட்டிலிருந்து வந்த குவாண்டாஸ் (Qantas QF589) விமானம் ‘லிமா’ டாக்ஸிவே வழியே சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில், மெல்போர்ன் செல்லவிருந்த மற்றொரு குவாண்டாஸ் (QF405) விமானத்திற்கும் அதே டாக்ஸிவேயில் நுழைய விமான […]

உலகம்

பொருளாதார பயங்கரவாதத்தை மேற்கொள்ளும் அமெரிக்கா – ஈரான் கண்டனம்

  • August 21, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிராக “வரலாற்றிலேயே மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை” அமெரிக்கா தயாரித்து வருவதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் Scott Bessent  தெரிவித்துள்ளார். பொருளாதார நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது, ஈரானுக்கு எதிரான மேலும் பெரிய இராணுவ நடவடிக்கைகளின் தேவையைக் குறைக்கக்கூடும் என்று பெசென்ட் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் “பொருளாதாரப் போர்” தொடுப்பதாக அச்சுறுத்தி, தெஹ்ரானுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத பொருளாதாரத் தனிமைப்படுத்தலை உறுதியளித்ததைத் தொடர்ந்து அவரின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன. அமெரிக்காவின் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து எண்ணெய் […]

ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் (AFP), ரஷ்ய -ஆஸ்திரேலிய நபர் ஒருவர் மீது வெளிநாட்டுத் தலையீடு (Foreign interference) குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் ரஷ்ய உளவாளி கைது: விசாரணை தீவிரம்

  • August 21, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் (AFP), ரஷ்ய -ஆஸ்திரேலிய நபர் ஒருவர் மீது வெளிநாட்டுத் தலையீடு (Foreign interference) குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளனர். 27 வயதான அந்நபர் நேற்று பிரிஸ்பேனின் மேல்பகுதியில் உள்ள சம்னர் (Sumner) பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். எனினும், அவர் விக்டோரியா மாநிலத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். திட்டமிட்டு வெளிநாட்டுத் தலையீட்டில் ஈடுபட முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று பிரிஸ்பேன் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இது தொடர்பான மேலதிக […]

பளையில் புலிகளின் முகாம் இல்லை: விசாரணையில் உறுதி என்கிறார் அமைச்சர் இலங்கை செய்தி

பளை காட்டில் புலிகளின் பயிற்சி முகாம்: வதந்தி பரப்பிய நபரின் மறுமுகம் அம்பலம்

  • August 21, 2026
  • 0 Comments

கிளிநொச்சி- பளை வனப்பகுதியில் புலிகள் அமைப்பின் பயிற்சி முகாமோ அல்லது குண்டு தயாரிப்பு நிலையமோ இயங்கவில்லை என்பது பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் விசாரணைகளில் உறுதியாகியுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே திட்டமிட்ட அடிப்படையில் இந்த வதந்தி பரப்பப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கவோ அல்லது இனவாதம், மதவாதத்தைப் பரப்புவதற்கோ அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என உறுதியளித்த அமைச்சர், நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, ” […]

ஈரான்மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதிக்கவுள்ளதாக அந்நாட்டின் திறைசேரிச் செயலாளர் (Treasury Chief) ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான்மீது பொருளாதாரத் தடை எச்சரிக்கை: கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

  • August 21, 2026
  • 0 Comments

ஈரான்மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதிக்கவுள்ளதாக அந்நாட்டின் திறைசேரிச் செயலாளர் (Treasury Chief) ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) தெரிவித்துள்ளார். இந் நடவடிக்கை புதிய பாரிய இராணுவ நடவடிக்கைகளின் தேவையைக் குறைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானுக்கு “எந்தவொரு வழியிலாவது உயிர்நாடியாகச் செயல்படும்” நாடுகளுக்கு எதிராகப் பொருளாதார நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், “பொருளாதாரப் போர்” முன்னெடுக்கப்படும் என்றும் அமெரிக்க அஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, வியாழக்கிழமை ஸ்காட் பெசென்ட் இந்த […]

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை (22) சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை செய்தி

நாளை யாழ். செல்கிறார் பிரதமர்: நல்லூர் கோவிலில் வழிபாடு

  • August 21, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை (22) சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். பல்கலைக்கழகத்தின் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு உள்ளிட்ட பல நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கிலேயே அவர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தருகின்றார். இந்நிகழ்வு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் (கச்சேரி) நடைபெறவுள்ளது. அதேவேளை, நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மஹோற்சவம் இடம்பெற்று வரும் நிலையில், பிரதமர் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாடு செய்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகம்

பெருவின் ஆண்டிஸ் மலைத்தொடரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • August 21, 2026
  • 0 Comments

பெருவின் தெற்கு ஆண்டிஸ் மலைத்தொடரில் நேற்று 6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதவிவாகியுள்ளது. அயாகுச்சோ Ayacucho  பிராந்தியத்தின் பரினகோச்சாஸ்  Parinacochas  மாகாணத்தில் உள்ள உபஹுவாச்சோவிலிருந்து Upahuacho 38 கிலோமீட்டர் (24 மைல்கள்) வடமேற்கே, 66.7 கிலோமீட்டர் (41 மைல்கள்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி மதியம் சுமார் 1 மணியளவில் (18:00 GMT) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், இகா மற்றும் அரேகிபா உட்பட தெற்கு பெருவின் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. […]

உலகம்

அதிகரிக்கும் கடற்கொள்ளை – 04 கப்பல்கள், 100 மாலுமிகள் சோமாலியர்கள் வசம்

  • August 21, 2026
  • 0 Comments

சோமாலிய கடற்கொள்ளையர்கள் நான்கு நாட்களில் இரண்டு கப்பல்களைக் கடத்தியுள்ளனர். மத்தியக்கிழக்கில அதிகரித்து வரும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு மத்தியில், சோமாலியா மற்றும் ஏமன் கடற்பரப்பில் கடற்கொள்ளை மீண்டும் பெரிய அளவில் தலைதூக்குகிறது என்ற கவலைகளை இது எழுப்பியுள்ளது. சோமாலியாவின் புன்ட்லாந்து Puntland  கடற்கரைக்கு அப்பால் கேமரூன் கொடியுடன் கூடிய எம்/வி லுட்டுஃப் (M/V LUTUF) கப்பலும், ஏமன் கடற்கரைக்கு அப்பால் எரித்திரிய கொடியுடன் கூடிய சிபு 1 (SIBU 1) என்ற எண்ணெய் கப்பலும் கடந்தப்பட்ட நான்கு கப்பல்களில் […]

மொனராகலை, கும்புக்னை பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற கொடூர பத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர். செய்தி

இலங்கையில் கோர விபத்து: ஐவர் பலி – மூவர் காயம்

  • August 21, 2026
  • 0 Comments

மொனராகலை, கும்புக்னை பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற கொடூர பத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர். வெள்ளவாய – மொனராகலை வீதியின் கும்புக்னை ‘களு பாலத்திற்கு’ அருகில், வெள்ளவாயவை நோக்கி பயணித்த டிப்பர் ரக லொறியொன்று, எதிர் திசையில் வந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தின் போது உழவு இயந்திரத்தின் பின்னாலுள்ள பெட்டியில் (Trailer) பயணித்த 10 பேரில் 8 பேர் பலத்த காயமடைந்து மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் […]

வடக்கு, கிழக்கில் காணிகளை உடன் விடுவிக்கவும்: ஜனாதிபதி உத்தரவு இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கில் காணிகளை உடன் விடுவிக்கவும்: ஜனாதிபதி உத்தரவு

  • August 20, 2026
  • 0 Comments

கடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தபட்ட, தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளை உடனடியாக விடுவித்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தல் வழங்கினார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகள் மற்றும் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட அரச காணிகள் ஆகியவற்றை மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விடுவிப்பதை துரிதப்படுத்துவது தொடர்பாக […]