உலகம் கல்வி

கடுமையான பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை!

  • May 31, 2026
  • 0 Comments

ஈரான்மீது தொடுக்கப்படும் எந்தவொரு ஆக்கிரமிப்பு முயற்சிக்கும் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரி தெரிவித்துள்ளார். ஈரானின் எல்லைப்பகுதிகளை நோக்கி எடுக்கப்படும் எந்தவொரு பகைமை நடவடிக்கையையும் முந்தைய தாக்குதல்களை விடவும் பலமடங்கு ஆற்றலுடன் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஈரானிய இராணுவம் எதிரிகளின் சவால்களை முறியடிக்க உறுதியுடனும் முழு பலத்துடனும் நிலைபெற்றுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார். நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்போவதில்லை என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் பாரிய தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்!

  • May 31, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் பாரிய அளவிலான தரைவழித் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எல்லையோரக் குடியிருப்புகளுக்கு நிலவும் நேரடி அச்சுறுத்தல்களை நீக்குவதையும், ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டமைப்புகளை அழிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இஸ்ரேலியப் படைகள் ஏற்கனவே Litani ஆற்றைக் கடந்து முன்னேறியுள்ளதோடு, Nabatieh போன்ற வடக்கு நோக்கி அமைந்துள்ள பகுதிகளுக்கும் தங்கள் தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளன. தற்காப்பு வளையத்தை வலுப்படுத்தவும் தீவிரவாத ஊடுருவல்களைத் தடுக்கவும் கூடுதல் ராணுவ வீரர்கள் தற்போது களமிறக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் […]

அரசியல் இலங்கை செய்தி

ஹர்ஷ டி சில்வாவுக்கு நிதி அமைச்சு பதவி?

  • May 31, 2026
  • 0 Comments

“நிதி அமைச்சு பதவியை பெறுவதற்காக கலாநிதி ஹர்ஷ டி சில்வா அரசாங்கத்துடன் இணையவுள்ளார் என வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. அவர் ஐக்கிய மக்கள் சக்தியுடனேயே பயணிப்பார்.” இவ்வாறு ஐமசவின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அஜித் பி பெரேரா எம்.பி. தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “நிதி அமைச்சு பதவியை பெறுமாறு ஹர்ஷ டி சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவ்வாறு வழங்கப்பட்டாலும் அதனை ஏற்கும் நிலைப்பாட்டில் அவர் இல்லை. ரணில் விக்கிரமசிங்க […]

செய்தி விளையாட்டு

IPL சாம்பியன் பட்டத்தை தக்கவைக்குமா RCB?

  • May 31, 2026
  • 0 Comments

ஐபிஎல் கிரிக்கெட் 2026 போட்டி தொடரில் இறுதி ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. நடப்பு சாம்பியனான ஆர்சிபி மற்றும் 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் 2-வது முறையாக கோப்பையை வெல்லும் கனவுடன் களமிறங்குகின்றன. லீக் சுற்றில் ஆர்சிபி அணி முதலிடம் பிடித்து அசத்தியிருந்தது. தொடர்ந்து தகுதி சுற்று 1-ல் குஜராத் டைட்டன்ஸ் அணியை 92 ஓட்டங்கள் […]

ஐரோப்பா

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்!

  • May 31, 2026
  • 0 Comments

ஐரோப்பாவின் மிகப்பெரியதும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளதுமான ஸபோரிஷியா (Zaporizhzhia ) அணுமின் நிலையம் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தாக்குதலால் முக்கிய உபகரணங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என ரஷ்ய தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனிய படைகள் ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி தாக்குதல்களை முன்னெடுத்ததாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. இந்த தாக்குதலை திட்டமிட்ட சதி என ரோசாட்டமின் (Rosatom) தலைவர் அலெக்ஸி லிகாச்சேவ்  ( Alexei Likhachev) தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த தாக்குதலை தங்கள் […]

ஐரோப்பா

பாரிஸில் கால்பந்து இரசிகர்களுக்கு இடையே வெடித்த மோதல்! பலர் கைது!

  • May 31, 2026
  • 0 Comments

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் கால்பந்து தொடருக்கான இறுதிபோட்டி நேற்று நடைபெற்றது. இதில் அர்செனலுக்கு எதிராக பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் (PSG) அணி வெற்றிப்பெற்றது. இதனைத் தொடர்ந்து போட்டியை காணவந்த கால்பந்து இரசிகர்களுக்கு இடையே கலவரம் வெடித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்கு பாரிஸில் உள்ள PSG-யின் பார்க் டி பிரின்சஸ் மைதானத்தைச் சுற்றி பதட்டமான சூழல்களும், சிறு மோதல்களும் ஏற்பட்டதாக பொலிஸார் விவரித்துள்ளனர். கலவரத்தை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக  130  பேர் தடுத்துவைக்கப்பட்டதாகவும், 45 பேர் காவலில் எடுக்கப்பட்டதாகவும் […]

ஐரோப்பா

பிரித்தானியா முழுவதும் கேட்ட மர்ம ஒலி!! வீடுகள் அதிர்ந்ததால் பரபரப்பு!

  • May 31, 2026
  • 0 Comments

பிரித்தானியா முழுவதும் நேற்றைய தினம் மர்மமான வெடிச் சந்தம் ஒன்று கேட்டதாக பெரும்பாலான மக்கள் முறைப்பாடு அளித்துள்ளனர். இந்நிலையில் இந்த சத்தம் விண்கல் அல்லது எரிமலைப் பாறையால் ஏற்பட்டிருக்கலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மாசசூசெட்ஸில் (Massachusetts) உள்ள காவல் துறைகளுக்கு அந்தச் சத்தம் குறித்து ஏராளமான அழைப்புகள் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குடியிருப்பாளர்கள் பலர் வீடு அதிரும் ஒரு உணர்வு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுவொரு விண்கல் தொடர்பான சத்தமாக இருக்கலாம் என வானிலை ஆய்வாளர்களான […]

உலகம்

நீருக்கடியில் இயங்கும் ட்ரோன்களை உருவாக்கும் முயற்சி!! கூட்டிணைந்த 03 நாடுகள்!

  • May 31, 2026
  • 0 Comments

கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக ” நீருக்கடியில் இயங்கும் ட்ரோன்களை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றம் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஈடுபடவுள்ளன. இந்த புதிய தொழில்நுட்பம் பற்றிய அறிவிப்பு நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. புதிய தொழில்நுட்பம் 2027-ஆம் ஆண்டுக்குள் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக கடலடி கேபிள்கள் மற்றும் குழாய்களைப் பாதுகாக்க இது உதவும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆக்கஸ்’ (Aukus) என்று அழைக்கப்படும் முத்தரப்பு இராணுவக் கூட்டணியின் ஒரு பகுதியாக இதற்கான […]

இலங்கை

எரிபொருளுக்கான விலை உயர்வு!!

  • May 31, 2026
  • 0 Comments

எரிபொருளுக்கான விலையை உயர்த்த இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விலை உயர்வானது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் லங்கா வொயிட் டீசலின் விலை  15 ரூபாயால் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கமைய அதன் புதிய விலை  407 ரூபாயாகும். அதேபோல்   சூப்பர் டீசல் லீட்டர் ஒன்றின்  விலை  20 ரூபாயால் உயர்த்தப்பட்டு 478  ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் ஆக்டேன் 95 பெட்ரோலின் விலை 25 உயர்த்தப்பட்டுள்ளது, அதன் புதிய […]

உலகம் செய்தி

வங்கதேசத்தில் 06 சிசுக்களின் மரணம் தொடர்பில் விசாரணை வேட்டை!

  • May 31, 2026
  • 0 Comments

வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் பிறந்து 03 நாட்களே ஆன 06 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வங்கதேசத்தில் தற்போது கடும் வெப்பநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்புப் பிரிவில் குளிரூட்டி பழுதடைந்ததாக கூறப்படுகிறது. மிதமிஞ்சிய வெப்பநிலையே குழந்தைகள் உயிரிழந்தமைக்கு காரணம் என மருத்துவ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்,  பச்சிளம் குழந்தைகளின் இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய எங்களுக்குச் சிறிது அவகாசம் தேவை, என்றும்  மருத்துவமனையின் இயக்குநர்களில் […]

error: Content is protected !!