உலகம் செய்தி

ஈரான் ஒருபோதும் அடிபணியாது!

  • April 15, 2026
  • 0 Comments

அமெரிக்கா அல்லது இஸ்ரேலின் எவ்விதமான அச்சுறுத்தல்களுக்கும் ஈரானிய மக்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டார்கள் என அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் Masoud Pezeshkian திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தமது நாடு ஏனைய நாடுகளுடன் ஆக்கபூர்வமான பேச்சுகளை நடத்தவே விரும்புகிறது எனவும், போரை ஈரான் வலிந்து விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் மீண்டும் அமைதி பேச்சு நடத்தப்படுவதற்குரிய சாத்தியம் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ள நிலையிலேயே, ஈரான் தரப்பில் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. […]

அறிவியல் & தொழில்நுட்பம்

எச்சரிக்கை பதிவு! மக்களின் கவனத்திற்கு!

  • April 15, 2026
  • 0 Comments

சுகாதார மற்றும் மருத்துவத் தகவல்களுக்காக செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களை பயன்படுத்துவது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவை தவறான அல்லது திசைதிருப்பும் பதில்களை வழங்கும் போக்கைக் கொண்டிருப்பதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சமீபத்திய ஆய்வு ஒன்றில், ChatGPT மற்றும் Grok உள்ளிட்ட மென்பொருட்களின் உரையாடல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவை 50 மருத்துவக் கேள்விகளுக்கு அளித்த பதில்களில் பாதி “சிக்கலானவை” எனக் கண்டறியப்பட்டது. Grok உரையாடல் மென்பொருட்களில் 58 சதவீத பதில்கள் சிக்கலானவையாக இருந்தன, இதுவே அதிகபட்சப் பிரச்சினைகளாக வெளிப்பட்டது. இதைத் […]

உலகம் செய்தி

ஈரானின் யூரேனியம் செறிவூட்டலுக்கு ரஷ்யா ஆதரவு!

  • April 15, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளே காரணம் என்று ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் Sergey Lavrov குற்றஞ்சாட்டியுள்ளார். ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சமரச பேச்சுகள் தொடர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஈரானின் அணுசக்தித் திட்டம் ராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படவில்லை என்ற சர்வதேச அணுசக்தி முகமையின் நிலைப்பாட்டையும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் தொடர்பான எந்தவொரு சுமுகமான தீர்வையும் ரஷ்யா […]

இலங்கை செய்தி

வடக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராய்வு!

  • April 15, 2026
  • 0 Comments

தற்போதைய நிலைமைகளில் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று (15) நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. நிர்மாணப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக ஒப்பந்ததாரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதனால் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், விலை மீளாய்வு உள்ளிட்ட பொருத்தமான மாற்று நடவடிக்கைகளைப் […]

உலகம் செய்தி

சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள பாகிஸ்தான் பிரதமரின் வெளிநாட்டு பயணம்!

  • April 15, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் Shehbaz Sharif சவுதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு அரசமுறை பயணத்தை ஆரம்பித்துள்ளார். ஏபர்ல் 15 முதல் 18 வரையில் 4 நாள் பயணமாகவே அவர் மேற்படி நாடுகளுக்கு செல்கின்றார். துருக்கியில் நடைபெறும் அந்தல்யா இராஜதந்திர மன்ற நிகழ்வில் பங்கேற்கும் அவர், அந்நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக கலந்துரையாடவுள்ளார். ஏனைய நாடுகளிலும் விசேட சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான […]

ஐரோப்பா

அடுத்த தேர்தலில் பாரிய தோல்வியை சந்திக்கும் தொழிற்கட்சி!

  • April 15, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் நடப்பு அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு நிலையை சமீபத்திய கருத்துக் கணிப்பொன்று வெளிப்படுத்தியுள்ளது. புதிய YouGov நடத்திய கருத்துக்கணிப்பில், அடுத்த தேர்தலில் சீர்திருத்தக் கட்சி ஆட்சியமைக்க அதிக வாய்ப்பை கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. சீர்திருத்தக் கட்சி 24 சதவீதத்துடன் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து கன்சர்வேடிவ் கட்சி 19 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. தொழிற்கட்சி 17 சதவீதத்துடன் நான்காம் இடத்திற்குச் சரிந்துள்ளது; 18 சதவீத வாக்குகளைப் பெற்ற பசுமைக் கட்சியை விட நடப்பு அரசாங்கம் பின்தங்கியுள்ளது. […]

உலகம்

முடிவுக்கு வரும் தருவாயில் ஈரான் போர்?

  • April 15, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த நீண்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் உறுதியான உடன்பாட்டை எட்டத் தவறிய போதிலும், ஈரான் போர் முடிவுக்கு வரும் தருவாயில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தற்போதைய இரண்டு வார கால போர் நிறுத்தம் ஏப்ரல் 21 அன்று முடிவடைய உள்ள நிலையில், இந்த வாரம் மேலும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்று ஈரான் உறுதியளிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையால் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளன. அணுவாயுத […]

இலங்கை செய்தி

மகாநாயக்க தேரர்களிடம் ஆசி பெற்றார் அநுர!

  • April 15, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை மல்வத்து மகா விகாரைக்குச் சென்று மகாநாயக்க அதிவணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். இதன்போது மகாநாயக்க தேரர், செத்பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு சிங்கள தமிழ் புத்தாண்டிற்கு தனது ஆசீர்வாதங்களை வழங்கினார். சுகாதார மற்றும் வெகுஜனஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அதன்பின்னர் அஸ்கிரி மகா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, மகாநாயக்க அதிவணக்கத்திற்குரிய […]

உலகம் செய்தி

சீனாவுக்கு ‘செக்’ வைக்கும் ட்ரம்பின் வியூகத்தை முறியடித்தது ரஷ்யா!

  • April 15, 2026
  • 0 Comments

ஈரான் துறைமுகங்கள்மீதான அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கையால் சீனாவில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படும்பட்சத்தில் ரஷ்யா உதவும் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் Sergey Lavrov அறிவித்துள்ளார். சீன ஜனாதிபதியுடன் பீஜிங்கில் நடைபெற்ற சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் உறுதியளித்துள்ளார் என தெரியவருகின்றது. உலகளாவிய அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியிலும் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவு மிகவும் வலுவாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், மாற்று […]

உலகம் செய்தி

இத்தாலி பிரதமர் கோழை: ட்ரம்ப் காட்டம்

  • April 15, 2026
  • 0 Comments

இத்தாலி பிரதமர் Giorgia Meloni தைரியமற்றவர் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இத்தாலி ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை இத்தாலி இடைநிறுத்தியுள்ளது. அதேபோல திருத்தந்தை தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட கருத்துக்கு இத்தாலி பிரதமர் கண்டனம் வெளியிட்டிருந்தார். இந்நிலையிலேயே ட்ரம்ப் இவ்வாறு விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கினால் அது இத்தாலிக்கே ஆபத்தாக முடியும் என்பதை Giorgia Meloni உணரவில்லை என டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

error: Content is protected !!