ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவது தொடர்பான பேச்சுவார்த்தை – ஐஸ்லாந்தில் பொதுவாக்கெடுப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதா, இல்லையா என்பது தொடர்பில்  ஐஸ்லாந்து மக்கள் இன்று  வாக்களிக்கவுள்ளனர்.

வாக்களிப்பு உள்ளூர் நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை  நடைபெறும்.

அதாவது ஐஸ்லாந்தை ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை தொடர்வதா இல்லையா என்பது தொடர்பிலேயே மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.

ஐஸ்லாந்து தனது நிதி நெருக்கடியைத் தொடர்ந்து, 2009-ல் இந்த ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர விண்ணப்பித்திருந்தது.

இருப்பினும், 2013-ல் ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்க்கும் கட்சி ஆட்சியமைத்ததை தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்பட்டன.

பின்னர் 2015-ல், அந்த நாடு தனது வேட்புமனுவை முறையாகத் திரும்பப் பெற்றுக்கொண்டது.

அதன்பிறகு, ஐரோப்பிய ஒன்றிய ஆதரவுக் கூட்டணி ஒன்று, அந்தப் பாதையை மீண்டும் தொடங்குவது குறித்து ஒரு பொது வாக்கெடுப்பு நடத்துவதாக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்து 2024 தேர்தலில் வெற்றி பெற்றது. அந்த வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்