நாடாளுமன்றத்தில் இருந்து தாம் விடைபெறுவதாகவும், இதுவே தனது இறுதி உரை என்றும் அர்ச்சுனா இராமநாதன் எம்.பி. தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

நாடாளுமன்றில் இறுதி உரை: மன்னிப்பு கோரினார் அர்ச்சுனா

  • August 22, 2026
  • 0 Comments

நாடாளுமன்றத்தில் இருந்து தாம் விடைபெறுவதாகவும், இதுவே தனது இறுதி உரை என்றும் அர்ச்சுனா இராமநாதன் எம்.பி. தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (21) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்: “இது எனது இறுதி உரையாகும். நான் யாருக்காவது எப்போதாவது தவறு செய்துள்ளேனா? நான் எனது மக்களை நேசிக்கின்றேன். சிங்கள மக்களுக்கும் நான் ஆதரவானவன். இறுதியாக நான் முன்வைத்த ஒத்திவைப்பு வேளை பிரேரணையும் முஸ்லிம் மக்களுக்கானதே ஆகும். இந்த […]

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலமானது முன்னுரிமை அடிப்படையில் செய்யப்பட வேண்டிய ஒரு விடயம் அல்ல என்றும், இதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளே ஏற்படும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு மஹிந்த கடும் எதிர்ப்பு

  • August 22, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலமானது முன்னுரிமை அடிப்படையில் செய்யப்பட வேண்டிய ஒரு விடயம் அல்ல என்றும், இதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளே ஏற்படும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: “அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தைக் கொண்டுவருவதை விடவும், மக்களுக்காக இந்த அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன. அந்தப் பணிகளை முதலில் […]

ஐரோப்பா

லண்டனில் நகைக் கடைக்குள் கொள்ளையடிக்க முயற்சி – சுரங்கம் தோண்டிய மூவர் கைது

  • August 21, 2026
  • 0 Comments

லண்டனில் உள்ள நகைக் கடை ஒன்றுக்குள் சுரங்கம் தோண்டி நுழைய முற்பட்ட மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் மூவரும் நகைகளை கொள்ளையடிக்க முயன்றதையும் ஒப்புக்கொண்டுள்ளனர். அதேநேரம் சுரங்கம் தோண்ட பயன்படுத்தும் கருவிகளையும் அவர்களிடம் இருந்து கைப்பற்றியதாக பெருநகர பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பெருநகர பறக்கும் படையின் விசாரணையில், இந்தக் குழு லண்டன் முழுவதும் £700,000-க்கும் அதிகமான மதிப்புள்ள கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இதனைத் தொடர்ந்து மூவரும் கிங்ஸ்டன் கிரவுன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட […]

ஐரோப்பா

புலம்பெயர்தோரை இத்தாலிக்கு அனுப்ப திட்டமிடும் சுவீடன்

  • August 21, 2026
  • 0 Comments

ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, தற்போது சுவீடனும் புலம்பெயர்ந்தோரை இத்தாலிக்கு திருப்பி அனுப்ப திட்டமிட்டுள்ளது. மேலும் பல ஐரோப்பிய அரசாங்கங்கள், புலம்பெயர்ந்தவர்கள் மீளவும் இத்தாலிக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவித்து வருகின்றன. இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் புகலிடம் மற்றும் குடியேற்றம் தொடர்பான புதிய ஒப்பந்தத்தின்படி,  “நிர்ணயிக்கப்பட்ட விதிகளைப் பின்பற்ற” உத்தேசித்துள்ளதாகவும், இத்தாலி உட்பட “அனைத்து உறுப்பு நாடுகளும் தங்கள் கடமைகளை நிறைவேற்றும்” என்று எதிர்பார்ப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது. ஸ்பெயினும் பிரான்சும் இதற்கு நேர்மாறான நிலைப்பாட்டை […]

ஐரோப்பா

ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரில் தாக்குதல் – 06 பேர் உயிரிழப்பு, 21 பேர் கவலைக்கிடம்

  • August 21, 2026
  • 0 Comments

மத்திய உக்ரைன் நகரமான கிரிவி ரிஹ்-இல் உள்ள வணிக வளாகம் ஒன்றின்மீது ரஷ்யா இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 06 பேர் கொல்லப்பட்டதுடன், 90 பேர் காயமடைந்துள்ளனர். ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரில் பகல் நேரத்தில் நடந்த இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஆறு குழந்தைகளும் அடங்குவர் என்று பிராந்திய ஆளுநர் ஒலெக்சாண்டர் ஹன்ஷா Oleksandr Hanzha தெரிவித்துள்ளார். “ஒரு குழந்தை உட்பட இருபத்தொரு பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்,” என்றும்  அவர் கூறினார். தாக்குதல் தொடர்பில் […]

ஐரோப்பா

ஐரோப்பாவின் 12 நாடுகளில் பரவி வரும் வைரஸ் தொற்று – மக்களுக்கு எச்சரிக்கை

  • August 21, 2026
  • 0 Comments

ஐரோப்பாவில் உள்ள பன்னிரண்டு நாடுகளில் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. வைரஸ் பரவை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நுளம்புகள் மூலம் பரவும் இந்த வைரஸ், காய்ச்சலைப் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும். ஆனால், தீவிரமான சந்தர்ப்பங்களில் இது நடுக்கம், காய்ச்சல், கோமா மற்றும் என்செபலைட்டிஸ் எனப்படும் மூளைத் திசுக்களின் அபாயகரமான வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இது மூளைக்காய்ச்சலையும் (மெனிஞ்சைடிஸ்) உண்டாக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அல்பேனியா, […]

ஐரோப்பா

சொகுசு கப்பலில் பயணிக்கு நேர்ந்த துயரம் – தேடுதல் பணி தீவிரம்

  • August 21, 2026
  • 0 Comments

ஸ்காட்லாந்து கடற்கரைக்கு அப்பால் பயணித்த சொகுசு கப்பலில் இருந்து சுற்றுலாப் பயணி ஒருவர் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எம்.எஸ். ஆம்பிஷன் MS Ambition, கப்பலில் இருந்த பயணி ஒருவரே இவ்வாறு விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அம்பாசிடர் குரூஸ் லைன் The Ambassador Cruise Line  நிறுவனத்தின் அந்தக் கப்பல், 2026 சூரிய கிரகண உல்லாசப் பயணத்தின் ஒரு பகுதியாக லெர்விக்கில் Lerwick இருந்து டண்டீக்குச் Dundee சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போன பயணியைத் தேடும் பணிகளை HM […]

ஐரோப்பா

சுவீடனில் உயர்நிலைப் பாடசாலையில் வாள்வெட்டு

  • August 21, 2026
  • 0 Comments

சுவீடனின் ஃபாகர்ஸ்டாவில் Fagersta உயர்நிலைப் பாடசாலையில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரின் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பொலிஸார் சம்பவ இடத்தை சுற்றிவளைத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நீதித்துறை அமைச்சர் குன்னார் ஸ்ட்ரோமர் உறுதிப்படுத்தினார்.

ஐரோப்பா

UK வில் புலம்பெயர்ந்தோருக்காக 40 மில்லியன் செலவு

  • August 21, 2026
  • 0 Comments

பிரித்தானியாவை விட்டு தன்னார்வமாக வெளியேறும் புலம்பெயர்ந்தோருக்கு £3,000 பவுண்ட்ஸ் வரை உதவித் தொகை வழங்கும்  திட்டத்திற்காக  தொழிலாளர் கட்சி கிட்டத்தட்ட £40 மில்லியனைச் செலவிட்டுள்ளது. ஜூலை 2024 இல்  ஆட்சிக்கு வந்ததிலிருந்து, தொழிலாளர் கட்சி இந்தத் திட்டத்தை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது. மார்ச் மாதத்திற்குள் 17,346 புலம்பெயர்ந்தோர் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஒரு கட்டாயத் திருப்பி அனுப்புதலுக்கு £48,000 மற்றும் ஒரு புகலிட விடுதியில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு £158,000 செலவாகும் நிலையில், ஒரு தன்னார்வத் […]

இராணுவ உறவுகளை வலுப்படுத்தவும், கனிம வளங்கள், ஆற்றல் (சக்தி) மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இணைந்து செயல்படவும் சீனாவும் இந்தோனேசியாவும் இணங்கியுள்ளன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பாதுகாப்பு உறவை பலப்படுத்த இந்தோனேஷியா, சீனா இணக்கம்

  • August 21, 2026
  • 0 Comments

இராணுவ உறவுகளை வலுப்படுத்தவும், கனிம வளங்கள், ஆற்றல் (சக்தி) மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இணைந்து செயல்படவும் சீனாவும் இந்தோனேசியாவும் இணங்கியுள்ளன. தென்சீனக் கடலில் நிலவும் பதற்றங்கள், சர்வதேசப் பொருளாதார மற்றும் பூகோள-அரசியல் சவால்களுக்கு மத்தியிலேயே இவ்வாறு இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இந்தோனேசியத் தலைநகர் ஜகார்தாவிற்கு விஜயம் மேற்கொண்ட சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் டொங் ஜுன் ஆகியோர், இந்தோனேசியாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். சந்திப்பின் […]