ஐரோப்பா

ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரில் தாக்குதல் – 06 பேர் உயிரிழப்பு, 21 பேர் கவலைக்கிடம்

மத்திய உக்ரைன் நகரமான கிரிவி ரிஹ்-இல் உள்ள வணிக வளாகம் ஒன்றின்மீது ரஷ்யா இன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் 06 பேர் கொல்லப்பட்டதுடன், 90 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரில் பகல் நேரத்தில் நடந்த இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஆறு குழந்தைகளும் அடங்குவர் என்று பிராந்திய ஆளுநர் ஒலெக்சாண்டர் ஹன்ஷா Oleksandr Hanzha தெரிவித்துள்ளார்.

“ஒரு குழந்தை உட்பட இருபத்தொரு பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்,” என்றும்  அவர் கூறினார்.

தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜெலன்ஸ்கி முற்றிலும் வஞ்சகமானது மற்றும் இழிவானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்