சுவீடனில் உயர்நிலைப் பாடசாலையில் வாள்வெட்டு
சுவீடனின் ஃபாகர்ஸ்டாவில் Fagersta உயர்நிலைப் பாடசாலையில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரின் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் பொலிஸார் சம்பவ இடத்தை சுற்றிவளைத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நீதித்துறை அமைச்சர் குன்னார் ஸ்ட்ரோமர் உறுதிப்படுத்தினார்.




