உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பாதுகாப்பு உறவை பலப்படுத்த இந்தோனேஷியா, சீனா இணக்கம்

இராணுவ உறவுகளை வலுப்படுத்தவும், கனிம வளங்கள், ஆற்றல் (சக்தி) மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இணைந்து செயல்படவும் சீனாவும் இந்தோனேசியாவும் இணங்கியுள்ளன.

இராணுவ உறவுகளை வலுப்படுத்தவும், கனிம வளங்கள், ஆற்றல் (சக்தி) மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இணைந்து செயல்படவும் சீனாவும் இந்தோனேசியாவும் இணங்கியுள்ளன.

தென்சீனக் கடலில் நிலவும் பதற்றங்கள், சர்வதேசப் பொருளாதார மற்றும் பூகோள-அரசியல் சவால்களுக்கு மத்தியிலேயே இவ்வாறு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்தாவிற்கு விஜயம் மேற்கொண்ட சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் டொங் ஜுன் ஆகியோர், இந்தோனேசியாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சந்திப்பின் தொடக்கத்தில் உரையாற்றிய சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ,

“இரு நாடுகளும் இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போதைய சர்வதேசச் சூழல் மிகவும் சிக்கலானது.

ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளும் ஆதிக்கச் செயற்பாடுகளும் உலகளாவிய ஒத்துழைப்பிலும் ஸ்திரத்தன்மையிலும் தீவிர தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இந்தோனேசியாவுடனான உயர் மட்ட ஒத்துழைப்பை ஏற்படுத்த சீனா தீவிரமாக முயல்கிறது” எனக் குறிப்பிட்டார்.

செயற்கை நுண்ணறிவு (AI), பாதுகாப்பு, ரயில் போக்குவரத்து, பசுமை ஆற்றல், செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மற்றும் மீன்பிடித்துறை உள்ளிட்ட பல துறைகளில் இணைந்து பணியாற்ற இரு நாடுகளும் உறுதியளித்துள்ளன.

1.4 டிரில்லியன் டொலர் ஜி-20 பொருளாதாரத்தைக் கொண்ட இந்தோனேசியாவில் நிக்கல், தகரம், செம்பு, தங்கம் மற்றும் பாக்சைட் ஆகியவற்றின் பெருமளவிலான வைப்புகளும், உலக அளவில் பனை எண்ணெய் (Palm oil) மற்றும் நிலக்கரி ஏற்றுமதியும் அதிகளவில் காணப்படுகின்றன. இவற்றின் முக்கிய கொள்முதல் நாடாகச் சீனா விளங்குகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி