வவுனியா பல்கலையில் புதிய விடுதிக்கான அடிக்கல் நாட்டு விழா: பிரதமர் பங்கேற்பு இலங்கை செய்தி

வவுனியா பல்கலையில் புதிய விடுதிக்கான அடிக்கல் நாட்டு விழா: பிரதமர் பங்கேற்பு

  • August 22, 2026
  • 0 Comments

நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான விடுதி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள 55 புதிய மாணவர் விடுதித் திட்டங்களின் கீழ், முதலாவது விடுதியாக வவுனியாப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படவுள்ள புதிய நான்கு மாடி விடுதிக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (22.08.2026) சிறப்பாக நடைபெற்றது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் கௌரவ பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டார். […]

இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணியின் (Senior Men’s Program) துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக ( ) முன்னாள் வீரர் ஹஷான் திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது. செய்தி விளையாட்டு

இலங்கை அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக ஹஷான் திலகரத்ன நியமனம்

  • August 22, 2026
  • 0 Comments

இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணியின் (Senior Men’s Program) துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக ( ) முன்னாள் வீரர் ஹஷான் திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையின் தேசிய உயர் செயல்திறன் மையத்தில் (National High Performance Center) தங்கியிருந்து செயல்படவுள்ள அவர், மூத்த பிரிவின் ஒரு அங்கமாக தேசிய அணி வீரர்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளார். 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த இவர், முன்னர் […]

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, எதிரணி வீரர்களைத் தாக்கிய அர்ஜென்டீனாவின் முன்னணி வீரர்கள் மூவருக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) தடை விதித்துள்ளது. செய்தி விளையாட்டு

அர்ஜென்டீனா வீரர்கள் மூவருக்கு FIFA அதிரடித் தடை

  • August 22, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, எதிரணி வீரர்களைத் தாக்கிய அர்ஜென்டீனாவின் முன்னணி வீரர்கள் மூவருக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) தடை விதித்துள்ளது. அத்துடன், மத்திய கள வீரர் லியான்ட்ரோ பரீடஸுக்கு (Leandro Paredes) 10 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் வீரர் எரிக் கார்சியாவின் (Eric Garcia) கழுத்தைப் பிடித்துத் தள்ளியதுடன், காவியையும் (Gavi) தரைமட்டமாக்கிய பரீடஸுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடையானது, 2014 ஆம் ஆண்டு உருகுவே […]

ஈரானியத் துறைமுகங்கள் மற்றும் கப்பல்கள் மீது அமெரிக்கா இராணுவ முடக்கத்தை தொடர்ந்து விதித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) "அமெரிக்க நிலப்பரப்பு" என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை அமெரிக்க நிலப்பரப்பு: ட்ரம்ப் அறிவிப்பு

  • August 22, 2026
  • 0 Comments

ஈரானியத் துறைமுகங்கள் மற்றும் கப்பல்கள் மீது அமெரிக்கா இராணுவ முடக்கத்தை தொடர்ந்து விதித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) “அமெரிக்க நிலப்பரப்பு” என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். தெற்கு கரோலினாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய ட்ரம்ப், “நாம் வெற்றி பெற்றுவிட்டோமா என்று கூட நமக்குத் தெரியவில்லை. ஏனெனில், ஹோர்முஸ் நீரிணையை நான் இப்போது ஒரு அமெரிக்க நிலப்பரப்பாகவே பார்க்கிறேன்” என்று கூறினார். மறைந்த செனட்டர் லிண்ட்சி கிரகாமின் வெற்றிடத்தை […]

உலகம்

கனடா மீதான புதிய வரிகள் – நள்ளிரவுக்கு பின் நடைமுறைக்கு

  • August 22, 2026
  • 0 Comments

அமெரிக்காவிற்கும் – கனடாவிற்கும் இடையிலான ஒப்பந்தம் தோல்வியடைந்துள்ளதை தொடர்ந்து கனடா மீது  ட்ரம்ப் நிர்வாகம் வரி விதித்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பானது இன்று நள்ளிரவுக்கு பின் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கனடியப் பொருட்களுக்கு, ஆகஸ்ட் 22 அன்று நள்ளிரவுக்குப் பிறகு பிரிவு 338-இன் கீழ் வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அமெரிக்காவுடனான கனடாவின் வர்த்தக அமைச்சர் டொமினிக் லெப்ளாங்க் […]

ஐரோப்பா

இத்தாலி நோக்கிச் சென்ற புலம்பெயர்ந்தோர் படகு விபத்து – 13 பேர் மாயம்

  • August 22, 2026
  • 0 Comments

இத்தாலியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த புலம்பெயர்ந்தோர் படகு ஒன்று துனிசியக் கடற்கரைக்கு அப்பால் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் குறைந்தத 13 துனியர்கள் காணாமல்போயுள்ளதுடன், இருவர் மட்டுமே மீட்கப்பட்டதாக புலம்பெயர்ந்தோர் உரிமைக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். குறித்த  துயரச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது. வியாழக்கிழமை அதிகாலையில் அந்தப் படகு புறப்பட்டது என்று துனிசிய மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தலைவர் முஸ்தபா அப்தெல்கெபிர் Mostafa Abdelkebir குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் உயிர் பிழைத்தவர்களில் இரண்டாவது நபரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். […]

இலங்கையில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தீவிரமாகப் பரவிவந்த டெங்கு நோயின் தாக்கம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இலங்கை செய்தி

இலங்கையில் கட்டுப்பாட்டுக்குள் வந்தது ‘டெங்கு’

  • August 22, 2026
  • 0 Comments

இலங்கையில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தீவிரமாகப் பரவிவந்த டெங்கு நோயின் தாக்கம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. குறிப்பிட்ட அவ்விரு மாதங்களிலும் நாளொன்றிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகிவந்த நிலையில், தற்போது நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை 80 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் 21,533 பேரும், ஜூலை மாதத்தில் 29,964 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். எனினும், ஆகஸ்ட் மாதத்தின் முதல் 20 நாட்களில் 8,043 நோயாளர்கள் மட்டுமே பதிவாகியுள்ளனர். தேசிய […]

கருத்து & பகுப்பாய்வு

06 மாதப் போர், கிடப்பில் போடப்பட்ட பேச்சுவார்த்தை : முடங்கும் பொருளாதாரம்

  • August 22, 2026
  • 0 Comments

அமெரிக்க – ஈரான் போர் ஆறு மாதங்களை நெருங்கிய நிலையில், இரு தரப்பினரும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபடவில்லை, ஆனால் சமாதானப் பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கவில்லை. இதற்கிடையில், குறுகிய நீர்வழியைக் கடக்க முயற்சிக்கும் அங்கீகரிக்கப்படாத எண்ணெய் கப்பல்களைத் தாக்குவோம் என்று தெஹ்ரான் தனது செல்வாக்கைப் பற்றிக்கொண்டிருப்பதால், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் ஏற்றுமதி கிட்டத்தட்ட நின்றுவிட்டது என்றே சொல்ல வேண்டும். அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், ஈரான் மீது “வரலாற்றிலேயே மிகக் கடுமையான தடைகளை” அறிவிப்பதாக உறுதியளித்தவாறே, திங்கட்கிழமை […]

ஆஸ்திரேலியா, சிட்னியில் யூதப் பண்டிகையின் போது 15 பேர் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தலைநகரப் பகுதியும் ஆயுதங்களைச் செலுத்திப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் (Gun buyback) திட்டத்தில் இணையவுள்ளதாகப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese) சனிக்கிழமை தெரிவித்தார். செய்தி

ஆஸ்திரேலியாவில் தீவிரமடையும் ஆயுதப் பறிமுதல் நடவடிக்கை

  • August 22, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா, சிட்னியில் யூதப் பண்டிகையின் போது 15 பேர் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தலைநகரப் பகுதியும் ஆயுதங்களைச் செலுத்திப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் (Gun buyback) திட்டத்தில் இணையவுள்ளதாகப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese) சனிக்கிழமை தெரிவித்தார். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரான சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் (Bondi Beach) கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி ஹனுக்கா (Hanukkah) கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலைத் தொடர்ந்து, ஆயுதங்களைத் […]

சீனா உள்ளிட்ட ஈரானின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளைப் பாதிக்கும் வகையில், புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவும் ஈரானும் ஒன்றையொன்று எச்சரித்து உரையாடல்களை வெளியிட்டுள்ளன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான்மீது பொருளாதாரத் தடை: சீனாவிடம் அமெரிக்கா விடுத்துள்ள அவசர கோரிக்கை

  • August 22, 2026
  • 0 Comments

சீனா உள்ளிட்ட ஈரானின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளைப் பாதிக்கும் வகையில், புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவும் ஈரானும் ஒன்றையொன்று எச்சரித்து உரையாடல்களை வெளியிட்டுள்ளன. போர் தொடங்கப்பட்டு ஆறு மாதங்களை நெருங்கும் நிலையிலும், இரு தரப்பினருக்கும் இடையே எந்தவித அமைதிப் பேச்சுகளும் நடைபெறவில்லை. அதேவேளை, ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியிலான எண்ணெய் போக்குவரத்து முற்றாக முடங்கியுள்ளது. அனுமதியற்ற எண்ணெய் தாங்கிப் படகுகள் அந்த குறுகிய நீர்வழியைக் கடக்க முயன்றால் தாக்குதல் நடத்தப்படும் […]