நைஜீரியாவை அச்சுறுத்தும் மனிதக் கடத்தல் – ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு
நைஜீரியாவில் கடந்த வாரம் ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட மக்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ஜனாதிபதி போலா டினுபு Bola Tinubu இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். வட-மத்திய நைஜர் மாநிலத்தில் மசூதியின் மீது தாக்குதல் நடத்திய ஆயுததாரிகள் அங்குள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளடங்களாக சுமார் 600 பேரைக் கடத்திச் சென்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்தியில், இது கோழைத்தனமானது எனக் கண்டித்ததுடன், இதற்குப் பொறுப்பானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் உறுதியளித்தது. […]













