இங்கிலாந்து மற்றும் வேல்ஸுக்கு 21 வெள்ள எச்சரிக்கைகள் விடுப்பு
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
வார இறுதியில் நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் முகமை வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில் இரண்டு வெள்ள எச்சரிக்கைகளும், 21 வெள்ள அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
இங்கிலாந்தின் 71.3 சதவிகிதப் பகுதிகளில் வறட்சி நீடித்த போதிலும் சடுதியாக மழை மற்றும் வெள்ளம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பர்மிங்ஹாமில் Birmingham ஏற்பட்ட குறிப்பிடத்தக்க தரைமட்ட வெள்ளம், டேம் பள்ளத்தாக்கு கால்வாய்க்கு அருகில் காணப்பட்ட 32 சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், வெள்ள நீரால் நெப்வொர்த் Knebworth மற்றும் லண்டன் London இடையேயான ரயில் சேவைகளிலும் இடையூறுகளை ஏற்படுத்தியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




