ஐரோப்பா

ஹாலே விமான நிலையம் மீதான தாக்குதல் முயற்சி – சூத்திரதாரிகளை பகிரங்கப்படுத்த ஜெர்மன் உறுதி

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் லீப்ஜிக்/ஹாலே விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல் முயற்சிக்கு யார் பொறுப்பு என்பதை ஜெர்மன் அரசாங்கம் விரைவில் அறிவிக்கும் என்று ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸ் Friedrich Merz இன்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது அரசாங்கம் பாதுகாப்பு அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.

பாதுகாப்பு வட்டாரங்கள், இந்தத் தாக்குதல் முயற்சியில் ரஷ்ய உளவுத்துறைக்குத் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றன.

ஆனால் பெர்லின் எந்த நேரடிக் குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கவில்லை.

பின்னணி

கடந்த ஆகஸ்ட் 4 அன்று, இராணுவப் பொருட்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் உக்ரேனிய அன்டோனோவ் Antonov சரக்கு விமானம் ஒன்றின் அருகே வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட  ஆளில்லா விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்