ஐரோப்பா

ரஷ்யாவை வெறிகொண்டு தாக்கிய உக்ரைன் – 06 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில் 800இற்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை ஏவி உக்ரைன் நேற்று  தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டு போர் தொடங்கியதில் இருந்து நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதலாக இது வர்ணிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரம் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

முக்கியமாக தெற்கு மற்றும் மேற்கு ரஷ்யாவில் உள்ள 17 பிராந்தியங்களில் ஆளில்லா விமானங்கள் பறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தாக்குதலால் ரஷ்ய மின் வணிக நிறுவனமான வைல்ட்பெர்ரீஸுக்குச் சொந்தமான ஒரு கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்