ஸ்பெயினின் தென்கிழக்கு மாகாணமான அல்மேரியாவில் (Almería) உள்ள லாஸ் காஸார்டோஸ் (Los Gallardos) பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் சிக்கி குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 6 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அந்தலூசியா (Andalusia) பிராந்திய அரசு தெரிவித்துள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ஸ்பெயினில் காட்டுத்தீயில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு

  • July 10, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் தென்கிழக்கு மாகாணமான அல்மேரியாவில் (Almería) உள்ள லாஸ் காஸார்டோஸ் (Los Gallardos) பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் சிக்கி குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 6 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அந்தலூசியா (Andalusia) பிராந்திய அரசு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் சிலர், தீயில் முற்றாகக் கருகிய வாகனங்களுக்குள் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மின்சாரக் கம்பி ஒன்று அறுந்து விழுந்ததே இந்தத் தீ விபத்துக்குக் காரணம் என்றும், இதனால் அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குத் தீ வேகமாகப் பரவியதாகவும் […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

தற்காப்புக்காகக் கடைசி வரை போராடுவோம் – ஈரான் திட்டவட்டம்

  • July 9, 2026
  • 0 Comments

அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறியுள்ளது என ஈரான் வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான சமரசப் பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கு வகித்து வரும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீரிடம் பேசிய அவர், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய ஈரான் முழு தயார் நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார். அமெரிக்காவின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு எதிராகத் தங்கள் நாட்டைத் தற்காத்துக் கொள்ளத் தயங்கப்போவதில்லை என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். […]

France’s President Emmanuel Macron with Syrian President Ahmed al-Sharaa ஐரோப்பா செய்தி

‘எண்ணெய் விநியோகம்’ – சிரியாவை குறிவைக்கும் பிரான்ஸ்

  • July 9, 2026
  • 0 Comments

வளைகுடா நாடுகளின் எண்ணெய் விநியோகத்திற்காக, ஹார்முஸ் நீரிணைக்கு மாற்றான ஒரு வழித்தடமாக சிரியாவை பிரான்ஸ் பரிசீலித்து வருகிறது. பிரான்ஸ் ஊடகமான ‘TF1’ இற்கு அளித்த நேர்காணலில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோல் பரோட் (Jean-Noel Barrot) இதனைத் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் ஏற்பட்டுள்ள மோதல் மற்றும் தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகளாவிய சந்தைகளுக்கு நம்பகமான விநியோகத்தை உறுதி செய்ய பலதரப்பட்ட எரிசக்தி வழித்தடங்கள் (energy corridors) அவசியமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து […]

பிரித்தானியாவில் போதைப் பொருள் பயன்படுத்திவிட்டு வாகனம் ஓட்டும் சாரதிகள் - ஒரு சிறப்பு பார்வை ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் போதைப் பொருள் பயன்படுத்திவிட்டு வாகனம் ஓட்டும் சாரதிகள் – ஒரு சிறப்பு பார்வை

  • July 9, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் குற்றங்களை விட, போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டும் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகப் புதிய புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இதன்படி, வடக்கு வேல்ஸ் முழுவதும் போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டும் குற்றங்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, வடக்கு வேல்ஸ் பொலிஸார், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றங்களுக்காக 883 பேரையும், போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டிய குற்றங்களுக்காக மேலும் 1,317 பேரையும் கைது செய்துள்ளனர். இந்த இரண்டு புள்ளிவிவரங்களும் 2024ம் ஆண்டை […]

தெஹ்ரானில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இல்லம் மற்றும் வளாகம் அழிக்கப்பட்டதன் முதல் காணொளியை ஈரானிய அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. உலகம் செய்தி

அமெரிக்கத் தாக்குதலில் அழிக்கப்பட்ட அலி கமேனியின் இல்லத்தின் முதல் காணொளி வெளியானது

  • July 9, 2026
  • 0 Comments

தெஹ்ரானில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இல்லம் மற்றும் வளாகம் அழிக்கப்பட்டதன் முதல் காணொளியை ஈரானிய அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அவரது இறுதிச் சடங்கின்போது இந்தக் காணொளி வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு பெப்ரவரி 28ம் திகதி, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதலில் 86 வயதான அலி கமேனி வீரமரணம் அடைந்தார். சர்வதேச ஊடக அறிக்கைகளின்படி, இந்தத் தாக்குதலில் உச்ச தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் உயிரிழந்தனர், அதேவேளையில் அவரது மகனும் தற்போதைய உச்ச தலைவருமான […]

இங்கிலாந்தில் மனித உரிமைச் சட்டங்களை மீறும் சட்டவிரோதக் குடியேறிகள் நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்க முடியாதபடி, மனித உரிமை அடிப்படையில் தாக்கல் செய்யப்படும் புகலிடக் கோரிக்கைகள் மீதான நடவடிக்கையை உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் தீவிரப்படுத்தியுள்ளார். ஐரோப்பா செய்தி

மனிதாபிமான தஞ்சம் கோருதல்கள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தும் பிரித்தானிய அரசு

  • July 9, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் மனித உரிமைச் சட்டங்களை மீறும் சட்டவிரோதக் குடியேறிகள் நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்க முடியாதபடி, மனித உரிமை அடிப்படையில் தாக்கல் செய்யப்படும் புகலிடக் கோரிக்கைகள் மீதான நடவடிக்கையை உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் தீவிரப்படுத்தியுள்ளார். பிரித்தானிய ஊடகங்களின்படி, தொழிலாளர் கட்சி அரசாங்கத்தின் இந்த புதிய சட்டம், ஐரோப்பிய மனித உரிமைகள் மாநாட்டின் (ECHR) 8வது பிரிவின் கீழ் உள்ள குடும்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கான உரிமை மீறல்களைத் தடுக்கும் முயற்சிகளில் ஒரு முன்னேற்றப் படியாக அமையும். இங்கிலாந்தில் […]

UK ambassador summoned in Iran over ‘baseless’ accusations ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரித்தானிய தூதுவரை நேரில் அழைத்து எதிர்ப்பு ஓலையை கையளித்தது ஈரான்

  • July 9, 2026
  • 0 Comments

தமது நாட்டுக்கு எதிராக பிரித்தானியா அதிகாரிகள் முன்வைத்துவரும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, ஈரான் வெளிவிவகார அமைச்சு, பிரித்தானிய தூதுவரை நேரில் அழைத்துக் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரான் வெளிவிவகார அமைச்சின், மேற்கு ஐரோப்பாவிற்கான துணைத் தலைவர் அலிரேசா யூசுபி , லண்டனின் இந்த அணுகுமுறையை கண்டித்து தூதுவர் ஹ்யூகோ ஷார்டரிடம் (Hugo Shorter) ஒரு எழுத்துப்பூர்வமான எதிர்ப்பு கடிதத்தை வழங்கியதாக Tasnim செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘Iran International’ ஊடகத்தின் ஊடகவியலாளர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட […]

டெங்கு நோயினால் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன. இலங்கை செய்தி

இலங்கையில் 45 பேரின் உயிரை பலியெடுத்த டெங்கு

  • July 9, 2026
  • 0 Comments

இலங்கையில் ஜூலை மாதத்தின் கடந்த 8 நாட்களில் மாத்திரம் 9,654 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் நாடு முழுவதும் 65,034 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு நோயினால் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன. மேல் மாகாணத்தில் மாத்திரம் 34,268 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கம்பஹா மாவட்டத்தில் 13,322 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 13,150 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 4,354 […]

Australia will export uranium to India under a new agreement signed today between Prime Minister Anthony Albanese and Indian Prime Minister Narendra Modi, as the leader of the world's most populous country continues his visit to Australia. ஆஸ்திரேலியா இந்தியா செய்தி

இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய ஆஸ்திரேலியா இணக்கம்

  • July 9, 2026
  • 0 Comments

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையே இன்று புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கன்பராவில் இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ஆஸ்திரேலியப் பிரதமர் அல்பானீஸ், “2015 இந்தியா – ஆஸ்திரேலியா அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தத்தின் கீழ், அமைதிப் பயன்பாட்டிற்காக இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்வதற்கான நிர்வாக ஏற்பாட்டில் (administrative arrangement) இன்று நாங்கள் கையெழுத்திட்டுள்ளதை உறுதிப்படுத்துகிறோம்” […]

போகம்பறை சிறைச்சாலை மீள திறப்பு - வெளியானது வர்த்தமானி இலங்கை செய்தி

போகம்பறை சிறைச்சாலை மீள திறப்பு – வெளியானது வர்த்தமானி

  • July 9, 2026
  • 0 Comments

கண்டி, பழைய போகம்பறை சிறைச்சாலையை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக மீண்டும் நிறுவியுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் 8 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஒரு சிறப்பு வர்த்தமானி மூலம் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய போகம்பறை சிறைச்சாலை, முழுவதையும் உள்ளடக்கிய அதிகார வரம்புடன், ஒரு சிறைச்சாலையாக நிறுவப்படுவதாக அந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் நிலவும் கடுமையான நெரிசலைக் குறைக்கவும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட உயிரிழப்புகளை அடுத்தும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]