உலகம் செய்தி

இன்னும் இறுதி ஒப்பந்தம் எட்டப்படவில்லை: ஈரான் தகவல்

  • May 25, 2026
  • 0 Comments

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், இறுதி ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையை மீள திறப்பது மற்றும் தற்காலிகப் போர்நிறுத்தம் போன்ற முக்கிய அம்சங்களில் இரு நாடுகளும் ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக இன்று மதியம் தகவல் வெளியானது. அமைதி ஒப்பந்தம் இன்று இறுதிப்படுத்தப்படலாம் என அமெரிக்க இராஜாங்க செயலாளரும் நம்பிக்கை வெளியிட்டிருந்தார். எனினும், ஈரானிய உயர்மட்டத் தலைமையுடன் தொடர்புகொள்வதில் உள்ள சிக்கல்கள் காரணமாக இந்த நடைமுறை சற்று தாமதமாகி […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

குதிரை வேகத்தில் குதிரை பேரம்: இதுவா தூயசக்தி?

  • May 25, 2026
  • 0 Comments

“தூயசக்தி என சுயதம்பட்டம் அடித்த தவெக, தற்போது குதிரை வேகத்தில் குதிரை பேர அரசியலை முன்னெடுத்துவருகின்றது.” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். அதிமுக எம்எல்ஏக்கள் மூவர், பதவி துறந்துவிட்டு தவெகவில் இணைந்துள்ள நிலையிலேயே ஸ்டாலின் இவ்வாறு விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் “ காட்சி 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. காட்சி 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவின் ஒரு அணியை ஆதரவாக […]

செய்தி பொழுதுபோக்கு

திரைப்படத் துறையினரின் கோரிக்கை ஏற்பு: முதல்வர் பிறப்பித்துள்ள உத்தரவு!

  • May 25, 2026
  • 0 Comments

புதிய திரைப்படங்கள் வெளியாகி ஒரு வாரத்துக்கு 5 காட்சிகள் திரையிடலாம் என்று தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், வார இறுதி நாட்கள், பொது விடுமுறை நாட்கள், மற்றும் பண்டிகை நாட்களிலும் தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரைப்படத் துறையினர் முதல்வர் விஜய்யை கடந்த மே 16 ஆம் திகதி சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் அனைத்து திரைப்படங்களையும் நாளொன்றுக்கு ஜந்து காட்சிகள் திரையிட அனுமதியளிக்கும்படி கோரியிருந்தனர். […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை முடக்க சதி: சுரேஷ் குற்றச்சாட்டு!

  • May 25, 2026
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல், ஒட்டுமொத்த மாகாண சபை முறைமையையே இல்லாமல் செய்வதற்கான சூழலைத் தற்போதைய அரசு தோற்றுவித்து வருகின்றது என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ” அமைச்சரவையிலோ அங்கம் வகிக்காத ஜே.வி.பி. கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, மாகாண சபைத் தேர்தல் 2027ஆம் ஆண்டிலேயே நடத்தப்படும் […]

இலங்கை செய்தி

வவுணதீவில் முதியவர் சடலமாக மீட்பு: விசாரணை வேட்டை தீவிரம்!

  • May 25, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறைப் பகுதியில், உடம்பில் காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை காலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. உன்னிச்சை, நெடியமடுப் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய கணவதிபிள்ளை யோகராசா என்ற முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இன்று காலை 8 மணியளவில் பாவக்கொடிச்சேனை சிவன் கோவில் பாறைப் பகுதியில், காயங்களுடன் நபர் ஒருவர் சடலமாகத் தரையில் கிடப்பதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள், அது குறித்து உடனடியாக வவுணதீவு பொலிஸாருக்குத் தகவல் […]

இலங்கை கல்வி

விபத்தில் இளம் தாய் பலி: கிளிநொச்சியில் சோகம்!

  • May 25, 2026
  • 0 Comments

கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் மோதியதில், பாடசாலைக்குத் தனது பிள்ளையை அழைக்கச் சென்ற தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:- உருத்திரபுரம் – கரடிப்போக்குச் சந்திக்கு இடைப்பட்ட பிரதான வீதியில் இன்று இளைஞர்கள் குழுவினர் சிலர் தங்களது மோட்டார் சைக்கிள்களை அதிவேகமாகச் செலுத்தி, ஆபத்தான முறையில் சாகசங்களில் ஈடுபட்டுள்ளனர். வீதியால் பயணிக்கும் ஏனைய பொதுமக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இந்தச் சாகசப் […]

இலங்கை செய்தி

08 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை: 31,078 பேர் பாதிப்பு!

  • May 25, 2026
  • 0 Comments

இலங்கையில் வவுனியா உட்பட 08 மாவட்டங்களில் நிலவும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 31 ஆயிரத்து இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்து 984 குடும்பங்களை சேர்ந்த 31 ஆயிரத்து 78 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாகவே பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 860 வீடுகள் பகுதியளவும், 2வீடுகள்முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. 446 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 724 பேர் 18 இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் ஆயிரத்து 204 […]

இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க வேண்டியது அரசின் பொறுப்பு!

  • May 25, 2026
  • 0 Comments

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை கண்டறிய வேண்டியது அரசின் பொறுப்பாகும். இது விடயம் தொடர்பில் பொறுப்புகூறல் முறையாக நிறைவேற்றப்பட வேண்டும்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அஜித் பி பெரேரா எம்.பி. வலியுறுத்தினார். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு , “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள், பிரதான சூத்திரதாரிகள் மற்றும் தொடர்புடையோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என நாம் எமது […]

உலகம் செய்தி

முடிவுக்கு வருகிறது ஈரான், அமெரிக்கா போர்? இன்று முக்கிய தீர்மானம்!

  • May 25, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வலுவான திட்ட வரைவு தற்போது தயாராக இருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையேயான உடன்படிக்கை இன்று திங்கட்கிழமை எட்டப்படலாம் என்றும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மார்கோ ரூபியோ, புதுடெல்லியில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். “பேச்சுவார்த்தைகள் இன்னும் முன்னேற்றக் கட்டத்திலேயே உள்ளன. நேற்று இரவே சில நல்ல செய்திகள் வெளியாகும் என […]

இலங்கை செய்தி

இலங்கை பொலிஸாருக்கு 134 வாகனங்களை வழங்கியது இந்தியா!

  • May 25, 2026
  • 0 Comments

இலங்கை பொலிஸின் பயன்பாட்டிற்காக, இந்திய – இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 134 கெப் (Single Cabs) ரக வாகனங்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று (25) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. இதற்காக இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளதுடன், இந்த கெப் ரக வாகனங்கள் வட மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளன. எதிர்காலத்திலும் இலங்கைக்கு இவ்வாறான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் […]