யாழில்ஆலயத் திருவிழாவில் அதிகளவு ஒளி காரணமாக கண் பாதிப்பு: 157 பேர் வைத்தியசாலையில் அனுமதி இலங்கை செய்தி

யாழில் ஆலயத் திருவிழாவில் அதிகளவு ஒளி: 157 பேருக்கு கண் பாதிப்பு

  • August 21, 2026
  • 0 Comments

யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயத்தில் நேற்றிரவு நடைபெற்ற திருவிழாவில் ஏற்பட்ட அதிகளவு ஒளி காரணமாகக் கண் பாதிப்புக்குள்ளானவர்கள் பலர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சையும் விசேட கண்காணிப்பும் வழங்கப்பட்டு வருகின்றன என்று வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். கண் பாதிப்புக்குள்ளானவர்களில் இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் இரு மாணவர்கள் மேலதிக சிகிச்சைகளைப் பெற்று வீடு திரும்பியுள்ளமையுடன், அவர்கள் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் இருக்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக யாழ்ப்பாணம் போதனா […]

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதியை (West Bank) இரண்டாகப் பிரிக்கும் வகையில், 'E1' குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 1,200 க்கும் மேற்பட்ட புதிய வீடுகளைக் கட்டுவதற்கான நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்துள்ளது. ஐரோப்பா செய்தி

இஸ்ரேலின் ‘E1’ குடியேற்றத் திட்டம்: ஐரோப்பிய நாடுகள் போர்க்கொடி

  • August 21, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதியை (West Bank) இரண்டாகப் பிரிக்கும் வகையில், ‘E1’ குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 1,200 க்கும் மேற்பட்ட புதிய வீடுகளைக் கட்டுவதற்கான நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்துள்ளது. சட்டவிரோதமான இந்த நகர்வுக்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பும் கண்டனமும் கிளம்பியுள்ளது. பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, கனடா மற்றும் நார்வே ஆகிய நாடுகள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், இஸ்ரேலின் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், பாலஸ்தீனப் பகுதிகளின் நிலத்தொடர்ச்சியை (Territorial […]

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று தனது 94 ஆவது வயதில் காலமானார். செய்தி பொழுதுபோக்கு

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி மறைவு

  • August 21, 2026
  • 0 Comments

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று தனது 94 ஆவது வயதில் காலமானார். செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணியளவில் அளவில் அவரது உயிர் பிரிந்தது. ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் (1931) பிறந்தவர். தந்தை காகித மில் அதிபர். இவரது தொழில் காரணமாக பல்வேறு இடங்களில் வசிக்க நேர்ந்தது. சென்னையில் வசித்தபோது, சாரதா வித்யாலயாவில் […]

புதிய அரசமைப்பு: பரந்தப்பட்ட கலந்துரையாடல் அவசியம் என்கிறது ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை செய்தி

புதிய அரசமைப்பு: பரந்தப்பட்ட கலந்துரையாடல் அவசியம் என்கிறது ஐரோப்பிய ஒன்றியம்

  • August 21, 2026
  • 0 Comments

தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து இலங்கையிலிருந்து வெளியேறவு இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கர்மென் மொரேனோ (Carmen Moreno) , பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தூதுவரை அன்புடன் வரவேற்ற பிரதமர், இலங்கை அண்மையில் முகங்கொடுத்த சவால்களின்போது ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஒத்துழைப்பிற்குத் தனது தெரிவித்தார். குறிப்பாக ‘டிட்வா’ சூறாவளி காரணமாக ஏற்பட்ட அனர்த்த சூழ்நிலையின்போதும், அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு மற்றும் […]

பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல் நினோ (El Niño) நிகழ்வு, மனித நினைவில் வாழும் வரலாற்றிலேயே மிகக் கடுமையானதாக இருக்கக்கூடும் எனப் பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் (UK Met Office) எச்சரித்துள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

வரலாற்றிலேயே மிகக் கடுமையான எல் நினோ: பிரித்தானிய வானிலை மையம் எச்சரிக்கை

  • August 21, 2026
  • 0 Comments

பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல் நினோ (El Niño) நிகழ்வு, மனித நினைவில் வாழும் வரலாற்றிலேயே மிகக் கடுமையானதாக இருக்கக்கூடும் எனப் பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் (UK Met Office) எச்சரித்துள்ளது. இயற்கையாக நிகழும் இந்த சக்திவாய்ந்த பருவநிலை நிகழ்வு, உலகளாவிய வெப்பநிலையை உயர்த்துவதுடன் தீவிர வானிலை மாற்றங்களின் அபாயத்தையும் அதிகரிக்கச் செய்யக்கூடியது. மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளுடன் இதுவும் சேரும்போது, வரலாற்றிலேயே மிக அதிக வெப்பம் நிறைந்த ஆண்டாக 2027 […]

“தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக முதல்வர் விஜய் கூறி வருவதால், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் திமுகவை சேர்ந்த 59 எம்எல்ஏக்களும் அரசு வழங்கும் கார்களை பெற மாட்டோம்.” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். அரசியல் இந்தியா செய்தி

தவெக அரசு வழங்கும் கார்களை நிராகரித்த திமுக எம்எல்ஏக்கள்

  • August 21, 2026
  • 0 Comments

“தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக முதல்வர் விஜய் கூறி வருவதால், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் திமுகவை சேர்ந்த 59 எம்எல்ஏக்களும் அரசு வழங்கும் கார்களை பெற மாட்டோம்.” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று பேசிய உதயநிதி ஸ்டாலின், “ அரசுக்கு ஏற்படும் தேவையற்ற செலவுகளை குறைக்கும் நோக்கில் எம்எல்ஏக்கள் தங்களது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள பொருளாதார சூழலை கவனத்தில் கொண்டு, பொருளாதாரத்தில் நலிவடைந்த […]

புலம்பெயர் தமிழர்கள் அச்சமின்றி தாயகம் திரும்பலாம்: கனடா தூதுவரிடம் ஆளுநர் சுட்டிக்காட்டு இலங்கை செய்தி

புலம்பெயர் தமிழர்கள் அச்சமின்றி தாயகம் திரும்பலாம்: கனடா தூதுவரிடம் ஆளுநர் சுட்டிக்காட்டு

  • August 21, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்தின் மீள்கட்டுமானம் மற்றும் பொருளாதார மீட்சி நடவடிக்கைகளுக்கு அரசு போதியளவு நிதியை ஒதுக்கிச் செயற்பட்டு வருவதுடன், வடக்கு மாகாணத்தில் முதலீடு, விவசாய உற்பத்திக்கு பெறுமதி சேர்த்தல் ஆகிய துறைகளில் மேலும் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். அதேவேளை, வடக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாகக் காணப்படுவதுடன், தமது கோரிக்கைகளுக்கான தீர்வுகள் விரைவாகக் கிடைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இஷேபிள் மார்ட்டின் தெரிவித்தார். வடக்கு […]

வடகொரியாவிற்கு இணக்கமான போக்கை வெளிப்படுத்தும் வகையில், அமெரிக்கா மற்றும் தென்கொரிய ராணுவங்கள் தங்களின் வருடாந்திரக் கூட்டுப் பயிற்சியை திட்டமிட்ட நாளுக்கு ஆறு நாட்களுக்கு முன்பாகவே வெள்ளிக்கிழமை நிறைவு செய்துள்ளன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ட்ரம்பின் சலுகையை நிராகரித்த வடகொரியா: ஏவுகணைகளைச் சோதித்து அதிரடி

  • August 21, 2026
  • 0 Comments

வடகொரியாவிற்கு இணக்கமான போக்கை வெளிப்படுத்தும் வகையில், அமெரிக்கா மற்றும் தென்கொரிய ராணுவங்கள் தங்களின் வருடாந்திரக் கூட்டுப் பயிற்சியை திட்டமிட்ட நாளுக்கு ஆறு நாட்களுக்கு முன்பாகவே வெள்ளிக்கிழமை நிறைவு செய்துள்ளன. இருப்பினும், பேச்சுவார்த்தைக்குத் திரும்புவதற்கு இந்நடவடிக்கை போதுமானதாக இல்லை என வடகொரியா தெரிவித்துள்ளது. முன்னதாக, Ulchi Freedom Shield என்ற கூட்டுப் பயிற்சியைத் தொடங்குவதற்கு சற்று முன்பாக, பயிற்சியின் அளவை “குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க” அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார். வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடனான […]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் தொடக்கத்தில் குறைவாக இருந்த நாடு கடத்தல் நடவடிக்கைகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நாடு கடத்தலை தீவிரப்படுத்தியது அமெரிக்கா: 2,300 மெக்சிகோ பிரஜைகள் வெளியேற்றம்

  • August 21, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் தொடக்கத்தில் குறைவாக இருந்த நாடு கடத்தல் நடவடிக்கைகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. இதன்படி, அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படும் மெக்சிகோ குடிமக்களை நேரடியாக மெக்சிகோவிற்கு அனுப்பாமல், குவாத்தமாலா மற்றும் ஹொண்டுராஸ் ஆகிய மத்திய அமெரிக்க நாடுகளுக்கு அமெரிக்கா நாடு கடத்தி வருவதாக அதிகாரப்பூர்வத் தரவுகள் தெரிவிக்கின்றன. நடப்பு ஆண்டில் இதுவரை சுமார் 2,300 மெக்சிகோ நாட்டவர்கள் குவாத்தமாலாவுக்கும், பல டஜன் கணக்கிலானோர் ஹொண்டுராஸுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர். வழக்கமாக அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் மெக்சிகோ குடிமக்கள் […]

“மேகே​தாட்டு அணை கர்​நாடகா​வுக்​காக அல்ல, தமி​ழ​கம் மற்​றும் புதுச்​சேரி​யின் பயன்​பாட்​டுக்​காகவே கட்​டப்​பட​வுள்​ளது” என கர்​நாடக முதல்​வர் டி.கே சிவக்​கு​மார் தெரி​வித்​துள்​ளார். இந்தியா செய்தி

தமிழகத்துக்காகவே மேகேதாட்டு அணை கட்டுகிறோம்: கர்​நாடக முதல்​வர்

  • August 21, 2026
  • 0 Comments

“மேகே​தாட்டு அணை கர்​நாடகா​வுக்​காக அல்ல, தமி​ழ​கம் மற்​றும் புதுச்​சேரி​யின் பயன்​பாட்​டுக்​காகவே கட்​டப்​பட​வுள்​ளது” என கர்​நாடக முதல்​வர் டி.கே சிவக்​கு​மார் தெரி​வித்​துள்​ளார். கோவளத்​தில் நேற்று நடை​பெற்ற தென்​மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்​கேற்று உரையாற்று கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” இந்​தி​யா​வின் மொத்த உள்​நாட்டு உற்​பத்​தி​யில் 33 சதவீதத்​துக்​கும் அதி​க​மாக தென்மாநிலங்கள் பங்​களிக்​கின்​றன. இதில் கர்​நாட​கா, நாட்​டின் மென்​பொருள் ஏற்​றும​தி​யில் 42 சதவீதத்​தை​யும், விமானத் துறை​யில் 60 சதவீதத்​தை​யும் அளிக்​கிறது. இருப்​பினும், 15-வது நிதி​யமைப்​பில் கர்​நாடகா​வுக்​கான நிதிப் பகிர்வு […]