ஆலயத்தில் பொருத்தப்பட்ட சீன மின் விளக்குகள் பறிமுதல்
யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய ஆலயத் திருவிழாவின் போது , அதிக ஒளி பாவனையால் நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கண் பாதிப்புக்கான காரணத்தைக் கண்டறியும் நோக்கில் பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக சக்தி கொண்ட சீனத் தயாரிப்பு மின் விளக்குகள் சிலவற்றைப் பொலிஸார் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.
கையகப்படுத்தப்பட்ட மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
அவற்றின் மின்சக்தி அளவு, பயன்பாட்டுத் தன்மை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அவை அனுமதிக்கப்பட்டவையா அல்லது தடை செய்யப்பட்டவையா என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகின்றது.




