செய்தி விளையாட்டு

மும்பை அணி அபார வெற்றி!

  • May 5, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 47 ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று மோதின. மும்பை இந்தியன்ஸ் அணி நேற்றைய போட்டியிலும் ஒரு கட்டத்தில் தோற்று விடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. நிகோலஸ் பூரன் 21 பந்துகளில் 63 ஓட்டங்களை விளாசிய போது மும்பை அணி கையைப் பிசைந்து கொண்டு நின்றது. அப்படியே விட்டிருந்தால் லக்னோ 250 ஓட்டங்களை எடுத்திருக்கும். […]

இலங்கை செய்தி

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வேன் விபத்து: 13 பேர் காயம்!

  • May 5, 2026
  • 0 Comments

கண்டி மாவட்டத்துக்குட்பட்ட நாவலப்பிட்டி, கெட்டபுலாவிலிருந்து ஹரங்கல நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேனொன்று இன்று (05) காலை விபத்துக்குள்ளானதில் 13 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இன்று காலை 7.00 மணியளவில், நாவலப்பிட்டி – திஸ்பனே சந்தி பகுதியில் குறித்த வேன் பயணித்துக்கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 13 மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் வேனின் சாரதியும் காயமடைந்த நிலையில் […]

அரசியல் இலங்கை செய்தி

தளபதி விஜய்க்கு இலங்கை நாடாளுமன்றில் வாழ்த்து!

  • May 5, 2026
  • 0 Comments

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவுசெய்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, இலங்கை நாடாளுமன்றத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே, இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவரான இரா. சாணக்கியன் எம்.பி. இவ்வாறு வாழ்த்து தெரிவித்தார். ” தமிழக சட்டமன்றத் தேர்தலில் வரலாற்று சாதனை படைத்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன். தமிழ்நாடு அரசோடும், தமிழக மக்களோடும் ஈழத் தமிழர் பிரச்சினை சம்பந்தமாக வேலை செய்வதற்கு […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

ஒரு வாக்கால் வெற்றியை பறிகொடுத்த முன்னாள் அமைச்சர்!

  • May 5, 2026
  • 0 Comments

தமிழக சட்டபேரவைத் தேர்தலில் சிவகங்கை திருப்பத்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பெரிய கருப்பன், ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். முன்னாள் அமைச்சரான அவரின் இந்த தோல்வி தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட சீனிவாச சேதுபதி தவெகவின் வெற்றியை 108ஆக மாற்றுவதற்கு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியுள்ளார். திமுக வேட்பாளர் பெரியகருப்பனுக்கும், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதிக்கும் இடையே இறுதிவரை இழுபறி நீடித்த நிலையில், இறுதிசுற்றில் இருவருக்கும் இடையே […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

ஆட்சியமைக்க 14 நாள் அவகாசம்: ஆளுநருக்கு விஜய் கடிதம்!

  • May 5, 2026
  • 0 Comments

ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கருக்கு, தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை எனில் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழல் ஏற்படுள்ளது. இந்நிலையில், தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கருக்கு தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பெரும்பான்மையை […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

தமிழக அரசியலில் அடுத்து நடக்கப்போவது என்ன?

  • May 5, 2026
  • 0 Comments

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், முதல்வராக பதவியேற்பதற்கு விஜய் தயாராகி வருகின்றார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம், 108 தொகுதிகளை வென்றுள்ளது. 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டப் பேரவையில் அறுதிப் பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கு 118 ஆசனங்கள் தேவைப்படுகின்றன. விஜய் இரட்டை தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளதால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். அக்கட்சியில் இருந்து ஒருவர் சபாநாயகராக தெரிவு செய்யப்பட வேண்டும். எனவே, […]

இலங்கை செய்தி

கணவனை கொலைசெய்து சடலத்தை மலசலக்கூட குழிக்குள் வீசிய மனைவி: மன்னாரில் கொடூரம்!

  • May 5, 2026
  • 0 Comments

குடும்பத் தகராறு காரணமாக தனது கணவனைக் கொலை செய்து, உடலைத் துண்டு துண்டுகளாக வெட்டி மலசலகூடக் குழியில் வீசிய பெண்ணொருவர் மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது. மன்னார் மூர் வீதியில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த தம்பதியினருக்கு இடையே கடந்த சனிக்கிழமை இரவு கடும் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது ஆத்திரமடைந்த மனைவி, தனது கணவனைத் தாக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர், நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை சடலத்தைத் துண்டு துண்டுகளாக […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கை தமிழர்களுக்கு தவெக ஆதரவு தொடரவேண்டும்!

  • May 5, 2026
  • 0 Comments

தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்துக்கும், அதன் தலைவர் விஜய் அவர்களுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரன் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழ் நாட்டு சட்டசபைக்கான தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்துக்கும், அதன் தலைவர் விஜய்க்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். இலங்கைத் தமிழ் மக்களுக்கு தமிழ் நாட்டு மக்களதும், அரசினதும் ஆதரவு தொடர்ந்து இருக்க வேண்டும் என்று உரிமையோடு எதிர்பார்க்கின்றோம்.” […]

உலகம் செய்தி

62 நாட்களுக்குள் லெபனானில் 2,696 பேர் பலி!

  • May 4, 2026
  • 0 Comments

இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 2026 மார்ச் 2 முதல் இதுவரையில் லெபனானில் 2,696 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 8,264 பேர் காயமடைந்துள்ளனர். லெபனான் சுகாதார அமைச்சு மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல், லெபனானுக்கிடையில் போர் நிறுத்தம் அமுலில் இருந்தாலும் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்திவருகின்றது. குறிப்பாக, தெற்கு லெபனானில் இஸ்ரேல் உக்கிர தாக்குதலை நடத்திவருகின்றது. லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். அமைதி பேச்சுக்காக ஈரானில் முன்வைத்துள்ள 14 பரிந்துரைகளில், லெபனான்மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்பது பிரதான விடயமாகும். அதேவேளை, காசாவிலும் […]

உலகம் செய்தி

கப்பல்மீது ஏவுகணை தாக்குதலா? அமெரிக்கா மறுப்பு!

  • May 4, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை வழியாக நுழைய முயன்ற அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் உரிமை கோரியுள்ளது. எனினும், இதனை அமெரிக்கா மறுத்துள்ளது. ஹார்முஸ் நீரிணைக்கு அருகில் அமெரிக்கப் போர்க்கப்பல் ராடார் கருவிகளை அணைத்துவிட்டு அத்துமீற முயன்றதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஈரானிய கடற்படையின் எச்சரிக்கைகளை அமெரிக்கப் படைகள் அலட்சியப்படுத்தியதால், அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது எனக் கூறப்படுகின்றது. ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்தத் […]