இந்த ஆண்டு ஹலோவீன் திருவிழா தடைப்பட வாய்ப்பு
பிரித்தானியாவில் பதிவான கடும் வெப்ப அலைகளும், தொடர்ச்சியான வறட்சியும் பூசணிப் பயிர்களின் வளர்ச்சியை கடுமையாகப் பாதித்துள்ளமையால் ஹலோவீன் திருவிழா தடைப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே முதல் செப்டம்பர் வரையிலான உச்ச பருவத்தில், இப்பகுதியில் 40 நாட்களுக்கும் மேலாக வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸைத் தாண்டியதால், பூசணிகள் சரியாக விளையவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் இந்த ஆண்டில் பிரபலமான ஹலோவீன் திருவிழாவிற்கு பூசணிக்காய் தட்டுப்பாடு ஏற்படலாம் எனத் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்காரணமாக ஹாலோவீன் அன்று குடும்பங்கள் தங்கள் பூசணிகளில் வண்ணம் தீட்டலாம் அல்லது வரையலாம் என்று விவசாயிகள் பரிந்துரைக்கின்றனர்.
இந்தக் கடுமையான வானிலை, உருளைக்கிழங்கு மற்றும் ஆப்பிள்களின் விளைச்சல்களிலும் தாக்கம் செலுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




