செய்தி விளையாட்டு

playoff சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியது சென்னை!

  • May 6, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 48 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து திணறியது. டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்களைப் பெற்றது. 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்கு, தலைவர் […]

இலங்கை செய்தி

‘நிதி அமைச்சின் செயலாளர் இரட்டை குடியுரிமை கொண்டிருக்கவில்லை’

  • May 6, 2026
  • 0 Comments

நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தனது பொதுப் பதவிக் காலத்தில் இரட்டைக் குடியுரிமை பெற்றிருக்கவில்லை என்று, ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தெரிவித்துள்ளார். ஹர்ஷன சூரியப்பெரும இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய குடியுரிமைகளை பெற்றிருந்தாரா என்பது குறித்தும், அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றபோது தனது ஆஸ்ரேலிய குடியுரிமையை முறையாகத் துறந்தாரா அல்லது துறப்புக்கான விண்ணப்பத்தை மட்டுமே சமர்ப்பித்தாரா என்பது குறித்தும் அண்மையில் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிட்ட ஊடகத்துறைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ, […]

செய்தி பொழுதுபோக்கு

மே 14 திரைக்கு வருகிறது கருப்பு!

  • May 5, 2026
  • 0 Comments

பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அத்துடன், மே 14 ஆம் திகதி திரையரங்குகளில் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு படத்தில் சூர்யாவுடன் திரிஷா, சுவாசிகா, யோகி பாபு, சிவதா, நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ட்ரீம்ஸ் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசை அமைத்திருக்கிறார்.

உலகம் செய்தி

ஈராக்கின் புதிய பிரதமருக்கு ஈரான் வாழ்த்து: அமெரிக்கா எச்சரிக்கை!

  • May 5, 2026
  • 0 Comments

ஈராக்கின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அலி அல்-சைதிக்கு Ali al-Zaidi , ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி Abbas Araghchi தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகளுக்கு மத்தியில், ஒரு மாத காலத்திற்குள் புதிய அமைச்சரவையை உருவாக்க வேண்டிய பாரிய பொறுப்பு புதிய பிரதமர் முன்னிலையில் உள்ளது. ஈராக்கின் அரசியல் நிலைத்தன்மைக்கு ஈரான் தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்கா மாறுபட்ட கருத்தை வெளியிட்டுள்ளது. ஈரான் ஆதரவு குழுக்களின் ஆதிக்கம் அரசாங்கத்தில் […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

தவெக சட்டமன்றக்குழு தலைவராக விஜய் தெரிவு!

  • May 5, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்றக்குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற தவெக எம்எல்ஏக்களை விஜய் இன்று சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது ஆட்சியமைப்பது தொடர்பிலும் ஆலோசனை நடந்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து, அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவெக சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் விஜய் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார். அதேவேளை, விஜய் […]

உலகம் செய்தி

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்குமாறு பாகிஸ்தான் கோரிக்கை!

  • May 5, 2026
  • 0 Comments

ஐக்கிய அரபு அமீரகத்தின் UAE சிவிலியன் கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் Shehbaz Sharif வன்மையாகக் கண்டித்துள்ளார். பிராந்தியத்தில் நிலையான அமைதியை நிலைநாட்ட, இருதரப்பும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மத்தியஸ்தராகச் செயல்படும் பாகிஸ்தான், இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் பேச்சுவார்த்தைக்கான சூழலைச் சிதைப்பதாகக் கவலை வெளியிட்டுள்ளார். அதேவேளை, நிலைமை மேலும் மோசமடைவதைத் தவிர்க்க இரு நாடுகளும் தொடர்ந்து […]

அரசியல் இலங்கை செய்தி

மலையக தமிழர்களுக்கு காணி உரிமை வழங்குமாறு சிறிதரன் எம்.பி. சபையில் வலியுறுத்து!

  • May 5, 2026
  • 0 Comments

“நீலகாமம் தோட்ட மக்களுக்கு நீதி கிடைக்கப்பெற வேண்டும். மலையக மக்களுக்கு நில உரிமை வழங்குவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்.” – என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” இரத்தினபுரி மாவட்டம், காவத்தை – நீலகாமம் தோட்டத்தில் கூலிக்காக அமர்த்தப்பட்ட காடையர்களால் தொழிலாளியின் குடியிருப்பு அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த மூவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை […]

உலகம் செய்தி

ஈரான் முழுமையாக அழிக்கப்படும்: ட்ரம்ப் ஆவேசம்!

  • May 5, 2026
  • 0 Comments

அமெரிக்க கப்பல்கள்மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்தநாடு முழுமையாக அழிக்கப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களை மீட்பதற்கான ‘Project Freedom’ என்ற நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது. இந்நிலையிலேயே அமெரிக்கக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்த நாடு முழுமையாக அழிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். சமீபத்திய மோதல்களில் ஈரானிய படகுகள் மற்றும் ஏவுகணைகளை அமெரிக்கா தாக்கி அழித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். […]

உலகம் செய்தி

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுகிறது அமெரிக்கா: ஈரான் குற்றச்சாட்டு!

  • May 5, 2026
  • 0 Comments

போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறுவதாகக் ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் Mohammad Ghalibaf, குற்றம் சாட்டியுள்ளார். ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா அந்தப் பகுதியில் தடையை விதித்துள்ளதாகவும், இது ஏற்றுக்கொள்ள முடியாத சூழலை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் ஈரான் இன்னும் தனது எதிர்ப்பைத் தீவிரமாகத் தொடங்கவில்லை என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசியல் இலங்கை செய்தி

“யாழ்ப்பாணத்தை தமிழகத்திடம் கொடுத்துவிடுங்கள்” – அர்ச்சுனா எம்.பி.

  • May 5, 2026
  • 0 Comments

” கச்சத்தீவை மட்டும் அல்ல யாழ்ப்பாணத்தையும் தமிழகத்துக்கு கொடுத்துவிடுங்கள்.” – என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (05) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அர்ச்சுனா எம்.பி. கூறியவை வருமாறு, ” தமிழ் மக்களின் இதயத்தை கவர்த்த தமிழக முதல்வர் விஜய்க்கு முதலில் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கின்றேன். வடக்கு மாகாணத்தில் தீவு பகுதிகளுக்கு மின்சாரம் இல்லை என்பது பெரும் குற்றச்சாட்டாக உள்ளது. நெடுந்தீவுக்கு அண்மையில் நான் சென்றபோது அங்கு […]