கிரீன்லாந்துமீது ட்ரம்ப் குறி: டென்மார்க் கூறுவது என்ன?
டென்மார்க்கின் சுயாட்சிப் பகுதியான கிரீன்லாந்து உட்பட ஆர்க்டிக் பிராந்திய விவகாரத்தில் அமெரிக்காவும் டென்மார்க்கும் அமைதியான முறையில் தீர்வு காணும் என்று எதிர்பார்ப்பதாக டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடரிக்சன் (Mette Frederiksen) திங்கள்கிழமை தெரிவித்தார்.
டென்மார்க்கால் கிரீன்லாந்தைப் பாதுகாக்க முடியாது என்ற காரணத்தைக் கூறி, அதன் கட்டுப்பாட்டை அமெரிக்கா ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தீவிரப்படுத்தியதன் மூலம், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க-ஐரோப்பிய உறவுகளிலும் – டிரான்ஸ் அட்லாண்டிக் நேட்டோ (NATO) இராணுவக் கூட்டமைப்பிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தினார்.
வடக்கு பின்லாந்தில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் சந்திப்பிற்குப் பிறகு உரையாற்றிய பிரெடரிக்சன்,
“நாம் இதற்கான வழியைக் கண்டறிய முடியும் என்பதில் நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். அதற்கான சில தெளிவான சமிக்ஞைகளை நாம் ஏற்கனவே காண்கிறோம். அமைதியான முறையில் ஒரு தீர்வை எட்ட முடியும் என்பதே எனது நம்பிக்கை” என்று குறிப்பிட்டார்.




