ஆட்சியமைக்க 14 நாள் அவகாசம்: ஆளுநருக்கு விஜய் கடிதம்!
ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கருக்கு, தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது.
எனினும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை எனில் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழல் ஏற்படுள்ளது.
இந்நிலையில், தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கருக்கு தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பெரும்பான்மையை நிரூபிக்க 14 நாட்கள் அவகாசம் வேண்டும் என தமிழக வெற்றிக்கழகத் தலைவர் கோரியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை திரும்பும் ஆளுநர் அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





