ஐரோப்பா

இத்தாலியில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு : வீதியில் தஞ்சமடைந்த மக்கள்

  • July 25, 2026
  • 0 Comments

இத்தாலியின் ஐசெர்னியா (Isernia) மாகாணத்தில் உள்ள பிஸ்ஸோன் (Pizzone) என்ற இடத்தில் இன்று நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 4.1 ரிக்டர் அளவில் பதிவானதாக அந்நாட்டின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலையியல் நிறுவனம் (ஐஎன்ஜிவி) தெரிவித்துள்ளது. செர்னியா (மோலிஸ்) மாகாணத்தில் உள்ள பிசோனில்  (Pizzone)  சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த  இந்த நிலநடுக்கமானது மாகாணம் முழுவதும் உணரப்பட்டதாகவும், மக்கள் பலரும் வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணிநேரங்களில் […]

ஐரோப்பா

போலந்து முதல் இத்தாலி வரை – 06 நாடுகளை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான நடை பாதை

  • July 21, 2026
  • 0 Comments

போலந்தின் பால்டிக் கடற்கரையிலிருந்து இத்தாலியின் ஏட்ரியாடிக் கடல் வரை ஆறு நாடுகளை இணைக்கும் நடைபாதையொன்றை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வோல்ஃப் டிரெயில்’ (Wolf Trail) என்றழைக்கப்படும் இந்த பாதையானது சுமார் 2,000 மைல் நீளம் கொண்டது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நிறுவனமான ஜாக் வோல்ஃப்ஸ்கின் (Jack Wolfskin) வடிவமைத்த இந்த பாதையானது, போலந்து, ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, இத்தாலி மற்றும் சுலோவீனியா ஆகிய நாடுகளை உள்ளடக்கி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த முழுப் பாதையிலும் பயணிக்கும் மலையேறுபவர்கள் 78,416 மீட்டர் […]

ஐரோப்பா

இத்தாலியில் சம்பள உயர்வு கோரி பேரணியாக சென்ற முப்படையினர்

  • July 19, 2026
  • 0 Comments

இத்தாலியின் ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு சேவைகளைச் சேர்ந்த சுமார் 6,000 உறுப்பினர்கள் நேற்றைய தினம் ரோம் நகரில் பேரணியாக சென்றனர். அதிக ஊதியம், சிறந்த ஓய்வூதியம் மற்றும் வலுவான பணியிடப் பாதுகாப்புகளைக் கோரி அவர்கள் இந்த பேரணியை முன்னெடுத்துள்ளனர். நாட்டின் முக்கிய பாதுகாப்பு மற்றும் தற்காப்புத் தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணியில் இராணுவம், கடற்படை, விமானப்படை, கராபினேரி (Carabinieri ) மற்றும் கார்டியா டி ஃபினான்சா (Guardia di Finanza) ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர். […]

ஐரோப்பா

ரஷ்யாவுக்கு உளவுத் தகவல்கள் பகிர்வு – இத்தாலியில் இரு முன்னாள் இராணுவத்தினர் கைது

  • July 7, 2026
  • 0 Comments

இத்தாலியில் உளவுத் தகவல்களை ரஷ்ய உளவாளிகளுக்கு பகிர்ந்துகொண்ட குற்றசாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தாலியின் உளவுத்துறையின் முன்னாள் உறுப்பினர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரோம் அரசு வழக்கறிஞர் அலுவலகம் இன்று தெரிவித்தது. சந்தேகபர்களின் பெயரை வெளியிடாத வழக்கறிஞர் அலுவலகம், கராபினேரி இராணுவக் காவல்துறையின் 59 வயது முன்னாள் அதிகாரி என்றும், உளவுத்துறையின் ஒரு பகுதியாகப் பணியாற்றியவர்கள் எனவும் தெரிவித்துள்ளது. பாதுகாக்கப்பட்ட தகவல்களைப் பரிமாற்றம் செய்தது, அத்துடன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை அனுமதியின்றி […]

ஐரோப்பா

இத்தாலியில் எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலங்கள்!!! இருவர் கைது!

  • June 3, 2026
  • 0 Comments

இத்தாலியில் நான்கு புலம்பெயர்ந்தோர் காருக்குள் வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இத்தாலியின் கலாப்ரியா மாநிலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது. எரிபொருள் நிலையம் ஒன்றில் இடம்பெற்ற மோதலை தொடர்ந்து மூன்று ஆப்கானியர்களும் பாகிஸ்தான் நபர் ஒருவரும் காரினுள் வைத்து  எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிரிவி காட்சிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அதில் நபர் ஒருவர் அவர்களை காருக்குள் வைத்து கதவை மூடும் காட்சி பதிவாகியுள்ளது. […]

ஐரோப்பா

337 மதிப்புமிக்க தொல்பொருட்கள் இத்தாலியிடம் ஒப்படைப்பு!

  • April 30, 2026
  • 0 Comments

இத்தாலியிடமிருந்து கைப்பற்றப்பட்ட 337 மதிப்புமிக்க தொல்பொருட்களை அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது. இந்நடவடிக்கையானது ரோம் மற்றும் வொஷிங்டனுக்கு இடையிலான வலுவான ஒத்துழைப்பைப் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது. பண்டைய ரோமானிய சிற்பங்கள் முதல் கிரேக்க, எத்ருஸ்கன் மற்றும் எகிப்திய கலைப்பொருட்கள் வரையிலான இந்தத் தொல்பொருட்களின் தொகுப்பு, இத்தாலியின் கராபினேரி கலாச்சாரப் பாதுகாப்புப் பிரிவின் தலைமையகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. நியூயார்க் நகரை மையமாகக் கொண்ட நீண்ட தொடர் விசாரணைகளின் விளைவாக இந்தப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. […]

உலகம்

இத்தாலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • March 10, 2026
  • 0 Comments

இத்தாலியின் மேற்கு கடற்கரைக்கு அப்பால் டைரேனியன் கடலில் (Tyrrhenian Sea) Richter அளவுகோலில், 6.1 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ) தெரிவித்துள்ளது. 377 கிலோமீட்டர் (234 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

G7 நாடுகளின் திடீர் முடிவால் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

  • March 9, 2026
  • 0 Comments

சர்வதேச சந்தையில் நிலவும் எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க, தமது அவசரக்கால எண்ணெய் இருப்புகளை கூட்டாக வெளியிடுவது குறித்து G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் இன்று (9) ஆலோசனை நடத்தவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் G7 அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்றன. எவ்வாறாயினும், இந்தச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாயர் ஒன்றின் விலை 117.65 அமெரிக்க டொலரில் இருந்து […]

ஐரோப்பா

பொது இடங்களில் புர்கா அணிவதற்கு தடை செய்யும் சட்டமூலத்தை முன்மொழிந்துள்ள இத்தாலி!

  • October 10, 2025
  • 0 Comments

இத்தாலியில் பொது இடங்களில் புர்கா அணிவதற்கு தடை செய்யும் சட்டமூலத்தை ஆளும் கட்சி அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. கலாச்சார பிரிவினைவாதத்தை எதிர்த்துப் போராடும் நோக்கத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையின் கீழ், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், பணியிடங்கள், கடைகள் மற்றும் அனைத்து பொது இடங்களிலும் முகத்தை மறைக்கும் ஆடைகள் தடை செய்யப்படும். தடையை மீறுபவர்களுக்கு  2,600 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால்,  பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் வலதுசாரி […]