திமிங்கல வேட்டை தடை – சட்டமூலத்தை தாக்கல் செய்ய தயாராகும் ஐஸ்லாந்து
ஐஸ்லாந்து அரசாங்கம் திமிங்கல வேட்டையைத் தடை செய்யும் சட்டமூலத்தை வரும் பெப்ரவரி மாதம் சமர்ப்பிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம், வணிக ரீதியான திமிங்கல வேட்டையைத் தொடரும் உலகின் இரண்டு நாடுகளாக நோர்வே மட்டும் ஜப்பான் ஆகிய நாடுகளே எஞ்சியிருக்கும்.
ஐஸ்லாந்தில் திமிங்கல வேட்டையானது, விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் ஹொலிவுட் பிரபலங்களிடமிருந்து பல ஆண்டுகளாகப் போராட்டங்களைத் தூண்டியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நடப்பு அரசாங்கத்திற்கு பெரும்பான்மை பலம் உள்ளதால், சட்டமூலம் நிறைவேறும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.




