இத்தாலியில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் உயர் வெப்ப எச்சரிக்கை
இத்தாலியில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் இன்று உயர் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த எச்சரிக்கைகள் வடகிழக்கில் உள்ள ட்ரைஸ்டே முதல் சிசிலியில் உள்ள பலேர்மோ (Palermo) வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
மேலும், முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மக்களுக்கும் சுகாதார அபாயம் தொடர்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடுமையான வானிலை பல நாடுகளில் வெப்பநிலையை 40°C-க்கு மேல் உயர்த்தியுள்ளது, இதனால் மில்லியன் கணக்கான மக்களுக்கு சுகாதார எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
மத்திய தரைக்கடல் முதல் மத்திய ஐரோப்பா வரை, நீடித்த வெப்பம், வறட்சி மற்றும் காட்டுத்தீ நிலைமைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
அத்துடன் தற்போதைய வெப்ப அலை, பொது சுகாதார அமைப்புகள், மின் உற்பத்தி, போக்குவரத்து வலைப்பின்னல்கள் மற்றும் சுற்றுலா உள்கட்டமைப்புகளில் உள்ள பலவீனங்களை வெளிப்படுத்தியுள்ளது.




