ஐரோப்பா

இத்தாலியில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு : வீதியில் தஞ்சமடைந்த மக்கள்

இத்தாலியின் ஐசெர்னியா (Isernia) மாகாணத்தில் உள்ள பிஸ்ஸோன் (Pizzone) என்ற இடத்தில் இன்று நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கமானது 4.1 ரிக்டர் அளவில் பதிவானதாக அந்நாட்டின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலையியல் நிறுவனம் (ஐஎன்ஜிவி) தெரிவித்துள்ளது.

செர்னியா (மோலிஸ்) மாகாணத்தில் உள்ள பிசோனில்  (Pizzone)  சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த  இந்த நிலநடுக்கமானது மாகாணம் முழுவதும் உணரப்பட்டதாகவும், மக்கள் பலரும் வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணிநேரங்களில் அதே பகுதியில் 9 கிலோமீட்டர் ஆழத்தில்  2.2 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காயம் மற்றும் சேதவிபரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்