ஐரோப்பா

எல்லை கட்டுப்பாடுகள் தொடர்பில் இத்தாலிக்கு இறுதி எச்சரிக்கை – ஸ்பெயின் அறிவிப்பு

ஸ்பெயினிலிருந்து வரும் பயணிகள் மீது விதிக்கப்பட்டுள்ள எல்லைக் கட்டுப்பாடுகளை வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன் நீக்க வேண்டும் என்று  இத்தாலிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் அரசாங்கம் இன்று இந்த எச்சரிக்கையை விடுத்தது.

இந்த நடவடிக்கை “அநியாயமானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் நலன்களுக்கு எதிரானது மற்றும் ஸ்பானிய மக்களுக்கு எதிரான பாகுபாடு கொண்டது” என்று ஸ்பெயின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால், ஸ்பானிய குடிமக்களின் நலன்களைப் பாதுகாக்க “சமமான நடவடிக்கைகள்” எடுக்கப்படும் என்று பிரதமர் பெட்ரோ சான்செஸின் (Pedro Sánchez) நிர்வாகம் எச்சரித்தது.

ஷெங்கன் எல்லைகள் குறியீட்டிற்கும் உண்மைகளுக்கும் பொருந்தாத போலியான வாதங்களை அடிப்படையாகக் கொண்டது” என்று ஸ்பெயின் அரசாங்கம் வாதிடுகிறது.

ஸ்பெயினின் இந்த எச்சரிக்கைக்கு பதிலளித்த இத்தாலிய அரசாங்கம், “ஸ்பெயினிலிருந்து வரும் மூன்றாம் நாட்டு குடிமக்களுக்கான ஷெங்கன் ஒப்பந்தத்தின் பயன்பாட்டை நிறுத்தி வைக்கும் எங்கள் முடிவை, குறைந்தபட்சம் ஆகஸ்ட் 15 வரை, எந்த சூழ்நிலையிலும் நாங்கள் மறுபரிசீலனை செய்ய விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்