உலகம் செய்தி முக்கிய செய்திகள்

‘ஐரோப்பாவில் நடந்த கொடூர இனப்படுகொலை’- போர்க்குற்றவாளி Ratko Mladic ஐ.நா.சிறையில் காலமானார்

  • August 27, 2026
  • 0 Comments

போஸ்னியப் போரின் (1992-1995)போது இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்காக வாழ்நாள் சிறைத்தண்டனையை எதிர்நோக்கிவந்த போஸ்னிய செர்பிய முன்னாள் படைத்தளபதி ரட்கோ ம்லாடிச் (Ratko Mladic) தனது 84வது வயதில் காலமானார். நெதர்லாந்தின்  Hague நகரிலுள்ள ஐ.நா சிறைச்சாலை வைத்தியசாலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். ஸ்ரெப்ரெனிக்கா இனப்படுகொலை 1995- ஆம் ஆண்டு ஐ.நா-வால் ‘பாதுகாக்கப்பட்ட பகுதி’ என அறிவிக்கப்பட்ட ஸ்ரெப்ரெனிக்காவில் 8,000-க்கும் மேற்பட்ட போஸ்னிய முஸ்லிம்கள் மற்றும் சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இவரே பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டுள்ளார். […]

செய்தி

கியூபெக்கில் விமானத்தின் சக்கரத்தில் சிக்கி நபர் ஒருவர் பலி

  • August 27, 2026
  • 0 Comments

கியூபெக்கில் Quebec உள்ள மாண்ட்ரீல்-ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில், ஏர்பஸ் ஏ350 விமானம் மோதியதில் விமான நிறுத்தப் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 39 வயதான ஆஸ்கார் ரொபாயோ Oscar Robayo என அடையாளம் காணப்பட்டுள்ளார். பாரிஸ்-ஓர்லிக்குச் சென்றுகொண்டிருந்த பிரெஞ்சு விமானமான BF5761-ஐ பின்னோக்கி தள்ளும்போது பணியாளர் விமானத்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கனடாவின் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியமும், கியூபெக் மரண விசாரணை அதிகாரி அலுவலகமும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளன.    

இலங்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

  • August 27, 2026
  • 0 Comments

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் மக்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி இடங்களில் வசிக்கும் மக்கள் வெயிலில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், நீரேற்றத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இந்தியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் சோனல் தினுஷா Sonal Dinusha விளாசிய அபார சதத்தின் உதவியுடன் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. செய்தி விளையாட்டு

சோனல் தினுஷா அபார சதம்: தோல்வியிலிருந்து தப்பியது இலங்கை

  • August 27, 2026
  • 0 Comments

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இந்தியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் சோனல் தினுஷா Sonal Dinusha விளாசிய அபார சதத்தின் உதவியுடன் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி ‘ followed-on’ பெற்ற போதிலும், 2வது இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சாளர்களின் சவால்களை முறியடித்து 5வது நாள் ஆட்டத்தின் இறுதியில் போட்டியை இலங்கை அணி வெற்றிகரமாக சமநிலையில் முடிவடைந்தது. தனது 5வது டெஸ்ட் போட்டியில் மட்டுமே […]

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தளதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (27) பிற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரி தரப்பு மகா நாயக்க தேரர்கள் உட்பட அனுநாயக தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றார். செய்தி

மகாநாயக்க தேரர்களிடம் ஆசிபெற்றார் ஜனாதிபதி

  • August 27, 2026
  • 0 Comments

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தளதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (27) பிற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரி தரப்பு மகா நாயக்க தேரர்கள் உட்பட அனுநாயக தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றார். முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மல்வத்து தரப்பின் மகா நாயக்க அதிவணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள மகா நாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்றதுடன், […]

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை செய்தி

காணிகோரி யாழ்.தையிட்டியில் இன்றும் போராட்டம்

  • August 27, 2026
  • 0 Comments

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விகாரை அமைந்துள்ள பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தனியார் காணிகளை எவ்வித தாமதமுமின்றி உரிய காணி உரிமையாளர்களிடம் உடனடியாக மீள வழங்க வேண்டும் என வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் தொடர்ச்சியாக இப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று புதன்கிழமை மாலையில் ஆரம்பித்த இந்தப் […]

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று மிகவும் பக்திபூர்வமாக நடைபெற்றது. இலங்கை செய்தி

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா (photos)

  • August 27, 2026
  • 0 Comments

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று மிகவும் பக்திபூர்வமாக நடைபெற்றது. பிரதம குரு சிவஶ்ரீ பாலேந்திரா ஐயா தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, கடந்த 13ஆம் திகதி அதிகாலை 12.20 மணியளவில் பக்தர்கள் புடைசூழ கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற திருவிழாக்களின் உச்சமாக, இன்று காலை 8.30 மணிக்கு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர், சந்நிதி வேலவன் காலை 9.40 மணியளவில் […]

ஐரோப்பா

ருமேனிய தூதரை விரும்பத்தகாத நபராக அறிவித்தது ரஷ்யா

  • August 27, 2026
  • 0 Comments

மொஸ்கோவில் உள்ள ருமேனிய தூதரகத்தில் பணியாற்றும் தூதரை விரும்பத்தகாத நபராக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ரஷ்ய தூதரை விரும்பத்தகாத நபராக அறிவிக்க புக்கரெஸ்ட் முன்னதாக எடுத்த நடவடிக்கைக்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

பிரித்தானியரின் கண்பார்வையை காப்பாற்றிய AI

  • August 27, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் Ai தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நபர் ஒருவருக்கு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகிலேயே முதல் முறையாக Ai  மூலம் மேற்கொள்ளப்பட்ட முதல் அறுவை சிகிச்சையாக இது மாறியுள்ளது. இதன் மூலம் அவரின் கண் பாதுகாக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மருத்துவர்கள், அந்தக் கட்டி அவரது பார்வைக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்திருக்கும். மேலும் இறுதியில் அது பார்வையிழப்புக்கு வழிவகுத்திருக்கக்கூடும். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அந்தக் கட்டியை அகற்றி, அவரது பார்வையைப் பாதுகாத்தது […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் ஜனாதிபதி அழைப்பு

  • August 27, 2026
  • 0 Comments

இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே அதிகளவிலான ஒற்றுமையும் கூட்டுறவும் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ள ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், பிராந்தியத்தின் பாதுகாப்பை அனைத்து முஸ்லிம் நாடுகளும் இணைந்து கூட்டுப் பொறுப்புடன் நிர்வகிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். மேலும், பிற நாடுகளின் தலையீட்டிற்கு இடம் தராமல், தமது பகிரப்பட்ட நலன்களை அடிப்படையாகக் கொண்டே முஸ்லிம் நாடுகள் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். டெஹ்ரானில் நடைபெற்ற 40-வது சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே […]