வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் மக்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி இடங்களில் வசிக்கும் மக்கள் வெயிலில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், நீரேற்றத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




