நீதித்துறையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்றும், இந்த விடயத்தில் மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பக்கமே நிற்கின்றார்கள் என்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

நீதித்துறை மறுசீரமைப்பு தொடரும்: அரசு திட்டவட்டம்

  • August 27, 2026
  • 0 Comments

நீதித்துறையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்றும், இந்த விடயத்தில் மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பக்கமே நிற்கின்றார்கள் என்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நீதித்துறை மறுசீரமைப்பு உள்ளிட்ட முக்கிய மாற்றங்களை முன்னெடுப்பதற்காகவே தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் தங்களின் ஆணையை வழங்கினார்கள். அதன் ஒரு அங்கமாகவே 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது நீதித்துறையின் சுயாதீனத்திற்கு எவ்வாறு அச்சுறுத்தலாக அமையும் என்பது புரியவில்லை. நீதித்துறையை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

20 வருடத்தில் முதல் முறையாக iPhone வடிவமைப்பில் மாற்றம்

  • August 27, 2026
  • 0 Comments

ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த படைப்புகளை வெளியிட தயாராகி வருகிறது. புதிய தலைமை நிர்வாகி ஜான் டெர்னஸின் John Ternus பதவிக்காலத்தைத் தொடங்கும் விதமாக, வரும் செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதி புதிய படைப்பை வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள ஆப்பிளின் தலைமையகத்தில் இந்த நிகழ்வு நடைபெறும் என்றும், இது அதன் இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் ஆதிக்கம் செலுத்தும் சந்தையில் நுழையும் விதமாக, தனது முதல் […]

ஐரோப்பா

UKவில் தொலைபேசி திருட்டுகளை தவிர்க்க மின்சார மிதிவண்டிகள் அறிமுகம்

  • August 27, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் தெருக் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்யவும், தொலைபேசி திருட்டுக்களை கையாளவும், பெருநகர கவால்துறை  மின்சார மிதிவண்டிகளை  அறிமுகப்படுத்தியுள்ளது. மெட் காவல்துறை 20 புதிய மின்சார மிதிவண்டிகளைப் பயன்படுத்துகிறது. இவை மணிக்கு 80 கி.மீ. வரை வேகத்தில் செல்லக்கூடியவை மற்றும் சந்தேக நபர்களைச் சாலைகளுக்கு வெளியேயும், படிக்கட்டுகளிலும் கூட பின்தொடரக்கூடியவை என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த மிதிவண்டிகள் குறிப்பாக கைபேசித் திருட்டுகளைக் கையாள உதவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை மே மாதம் வரையிலான […]

ஐரோப்பா

பிரான்ஸில் பாதசாரிகள் மீது வேண்டுமென்றே மோதிய கார் – 07 பேர் கவலைக்கிடம்

  • August 27, 2026
  • 0 Comments

பிரான்சின் கேன் Caen நகரில் உள்ள ரயில் நிலையத்தில் பாதசாரிகள் கடவையில் கார் ஒன்று வேண்டுமென்றே மக்கள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களின் ஏழு பேரின் நிலைக் கவலைக்கிடமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் ரஷ்யாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவரது நோக்கம் இன்னும் தெரியவில்லை என்றும் சிசிரிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகள் […]

உலகம்

சவூதி எண்ணெய் ஆலை மீது பறந்த ட்ரோன்கள் – சுட்டு வீழ்த்திய கிரேக்க இராணுவம்

  • August 27, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பகுதியில் பறந்த ட்ரோன் விமானங்களை கிரேக்க இராணுவத்தினரால் இயக்கப்படும் வான்பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த ட்ரோன்கள் எங்கிருந்து ஏவப்பட்டன என்பதை அதிகாரிகள் வெளியிடவில்லை. ஆனால் சவூதி வான் பாதுகாப்பு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டதாக மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிரேக்க பேட்ரியாட் அமைப்பு மூன்று ஏவுகணைகளை ஏவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடங்கியதிலிருந்து, கிரேக்கத்தால் […]

உலகம்

அமெரிக்கா மீதான வரி – கடலுணவு பொருட்களுக்கு விலக்கு

  • August 27, 2026
  • 0 Comments

அமெரிக்கா மீது விதிக்கப்பட்டுள்ள எதிர்வரி பட்டியலில் இருந்து கடலுணவுப் பொருட்களை கனடா இன்று நீக்கியது. கனடா மீது அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்ததைத் தொடர்ந்து பதில் நடவடிக்கையாக அமெரிக்க பொருட்கள் மீது கனடா 50 சதவீதம் வரி விதித்தது. இந்நிலையில் கடலுணவுப் பொருட்கள் மற்றும் மீன்கள் மீதான வரியை விலக்கிக் கொண்டுள்ளதாக கனடா நீதித்துறை இன்று எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அத்துடன் தேர்ந்தெடுக்க சில மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பில் கனேடிய தொழில்துறைகளுடன் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் […]

நேபாளம் மற்றும் சீன ஆட்சிக்கு உட்பட்ட திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 1,500 பேர் வரை இன்னமும் மாயமாகியுள்ளனர். இப் பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உலகம் செய்தி

மீட்பு பணி தீவிரம்: 5,000 இற்கு மேற்பட்ட படையினர் களமிறக்கம்

  • August 27, 2026
  • 0 Comments

நேபாளம் மற்றும் சீன ஆட்சிக்கு உட்பட்ட திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 1,500 பேர் வரை இன்னமும் மாயமாகியுள்ளனர். இப் பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காணாமல் போனவர்களில் சுமார் 700 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலைப் பகுதிகள் நிறைந்த இந்த எல்லை மண்டலம், மலையேற்றப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் அதிகம் நடமாடும் பகுதியாகும். பாதிக்கப்பட்ட கரடுமுரடான மலைப் […]

ஐரோப்பா

நோர்வே மன்னர் ஹரால்டின் உடல்நிலைக் கவலைக்கிடம்

  • August 27, 2026
  • 0 Comments

நோர்வே மன்னர் ஹரால்டின் Harald உடல்நிலை மோசமடைந்து கவலைக்குரிய நிலையில் இருப்பதாக அரசவை இன்று அறிவித்துள்ளது. ஐரோப்பாவின் மிக வயதான மன்னரும், 1991 முதல் நோர்வேயின் சடங்கு ரீதியான அரசுத் தலைவருமான ஹரால்ட், ஆகஸ்ட் 17 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரத்தத்தில்  பாக்டீரியா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ராணி சோன்யா மற்றும் பட்டத்து இளவரசர் ஹாக்கன் Haakon ஆகிய இருவரும் திட்டமிட்ட அனைத்து நிகழ்வுகளையும் இரத்து செய்துள்ளனர். பட்டத்து இளவரசர் மற்றும் ராணி […]

உலகம்

நேபாளம் அனர்த்தம் – ஐரோப்பிய பயணிகளுக்கு விசேட அறிவித்தல்

  • August 27, 2026
  • 0 Comments

நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள் பயணிகளுக்கான பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் அவசரத் தொடர்பு எண்களையும் வெளியிட்டுள்ளன. நேபாள வெள்ளப் பெருக்கில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 517 வெளிநாட்டினர் உட்பட 644 சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் இல்லை என்று நேபாள சுற்றுலா வாரியம் இன்று அறிவித்தது. பயணிகள் தாங்கள் இருக்கும் இடத்தை அருகிலுள்ள காவல்துறை அல்லது பாதுகாப்பு அதிகாரி, உள்ளூர் நிர்வாகம், பயண முகவர், வழிகாட்டி அல்லது சுற்றுலா ஏற்பாட்டாளரிடம் […]

நடிகர் ரஜினி நடித்துவரும் 'தர்மன்' திரைப்படத்தில் நடிகை ஸ்ரேயாவும் நடிக்கின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. சிவாஜி படத்துக்கு பிறகு தற்போதே அவர் ரஜினியுடன் நடிக்கின்றார். செய்தி பொழுதுபோக்கு

19 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் ஸ்ரேயா

  • August 27, 2026
  • 0 Comments

நடிகர் ரஜினி நடித்துவரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ரேயாவும் நடிக்கின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. சிவாஜி படத்துக்கு பிறகு தற்போதே அவர் ரஜினியுடன் நடிக்கின்றார். திலீப்​கு​மார் இயக்​கத்​தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெ​யிலர் 2’ திரைப்படம் அக்​டோபர் மாதம் வெளி​யாக இருக்​கிறது. இந்தப்படத்​தின் முதல் பாடல் சமீபத்​தில் வெளியாகி வரவேற்பைப் பெற்​றது. அதில் நடிகை பூர்ணா நடனம் ஆடியிருந்தார். இப்​படத்​துக்கு பிறகு அஸ்​வத் மாரி​முத்து இயக்​கும் ‘தர்மன்’ படத்​தில் நடித்து வரு​கிறார். இதன் 3-ம் கட்ட படப்பிடிப்பு ஹைத​ரா​பாத்​தில் […]