இலங்கை

தீவிரமடையும் டெங்கு தொற்று : மாணவர்களுக்கு விசேட உடை அணிய அறிவுறுத்து

  • July 12, 2026
  • 0 Comments

டெங்கு நுளம்புகள் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நுளம்புகள் கடிக்காத வண்ணம் பாடசாலை சீருடையுடன் சேர்த்து கைகளையும் கால்களையும் மறைக்கும் பொருத்தமான ஆடைகளை அணிய அனுமதிக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பில் கடிதம் மூலம் பாடசாலை அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களிடையே டெங்கு பரவும் அபாயத்தைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில்   டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், […]

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். இலங்கை

சிறைக் கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கை தொடர்பில் முக்கிய தீர்மானம்

  • July 12, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறையிலிருந்து மற்ற சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளை காணொளிக் காட்சி தொழில்நுட்பத்தின் மூலம் நடத்த சிறைச்சாலை  திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய நாளை (13.07) முதல் நீதிமன்றங்களில் ஆஜராக வேண்டிய கைதிகள் காணொளிக் காட்சி இணைப்புகள் மூலம்  இணைக்கப்படுவார்கள் என்று குறித்த திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் ஆணையர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார். நீர்கொழும்பு சிறையில் சமீபத்தில் நடந்த மோதலைத் தொடர்ந்து,  கைதிகள் மற்ற சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். மாற்றப்பட்ட கைதிகளை அவர்களது வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்வது […]

உலகம்

ஹார்மூஸ் ஜலசந்திப் பாதையில் அமெரிக்க படைகள் : பயணத்தை தொடர அறிவுரை

  • July 12, 2026
  • 0 Comments

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) ஹார்மூஸ் ஜலசந்தியை மூடிவிட்டதாக அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) குறித்த நீர்வழிப் பாதை திறந்தே உள்ளதாக தெரிவித்துள்ளது. “சர்வதேச நீர்வழியைச் சட்டப்பூர்வமாகக் கடக்க விரும்பும் அனைத்துக் கப்பல்களுக்கும் ஹோர்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது,” என்று CENTCOM தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், “நியாயமற்ற ஈரானிய ஆக்கிரமிப்பு, துன்புறுத்தல், அச்சுறுத்தல்கள் மற்றும் தன்னிச்சையான அறிவிப்புகள் இருந்தபோதிலும், கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரம் தொடர்ந்து கிடைப்பதை […]

ஐரோப்பா

இங்கிலாந்து பொருளாதாரம் தேக்கமடையும் சாத்தியம்

  • July 12, 2026
  • 0 Comments

தொழில்துறைகள் அழுத்தத்தில் இருப்பதாலும், புவிசார் அரசியல் பதட்டங்கள் வளர்ச்சியைத் தடுப்பதாலும், இங்கிலாந்து பொருளாதாரம் மேலும் ஒரு மாதத்திற்கு தேக்க நிலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய புள்ளியியல் அலுவலகம் ( ONS), மே மாதத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி ( GDP ) புள்ளிவிவரங்களை வியாழக்கிழமை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது l. ஏப்ரல் மாதத்தின் 0.1 சதவிகித சரிவைத் தொடர்ந்து, மே மாதத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மாற்றமின்றி இருக்கும் அல்லது சரியும் என்று பொருளாதார வல்லுநர்கள் பரவலாக எதிர்பார்க்கின்றனர். இது, மார்ச் மாதத்தின் […]

இலங்கை

நாட்டின் 06 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை

  • July 12, 2026
  • 0 Comments

நாட்டின் 06 மாவட்டங்களுக்கு வெப்பநிலைக்கு உரிய கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் வெப்பநிலையானது மனித உடலால் உணரக்கூடிய எச்சரிக்கை அளவை தாண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வெப்பக் குறியீட்டு முன்னறிவிப்பானது, சார்பு ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது என்றும், இது உங்கள் உடலில் உணரப்படும் நிலையாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயிலில் நீண்ட நேரம் இருப்பதும், […]

உலகம்

ஈரானின் தொடர் தாக்குதலால் கத்தாரில் மூவர் படுகாயம்

  • July 12, 2026
  • 0 Comments

கத்தாரில் ஈரான் நடத்திய தொடர் தாக்குதல்களால் சிறிய குழந்தை உள்பட மூன்று பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 140 ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் இன்று தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலைத் தாங்கள் இடைமறித்ததாகவும், அதனால் சிதறல்கள் விழுந்ததாகவும் கத்தார் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அந்த சிதறல்களின் காரணமாக மூவர் படுகாயம் அடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அநேரம் ஐக்கிய அரபு […]

உலகம்

டொரண்டோவில் விழாவொன்றில் துப்பாக்கிச்சூடு – இருவர் உயிரிழப்பு

  • July 12, 2026
  • 0 Comments

டொரண்டோவில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் நால்வர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். லத்தீன் அமெரிக்க கலாச்சார விழா ஒன்று நடைபெற்று வந்த நிலையில், செயின்ட் கிளேர் அவென்யூ ( St Clair Avenue ) வெஸ்ட் மற்றும் ஆர்லிங்டன் அவென்யூ (West and Arlington Avenue) அருகே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இறந்தவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  காயமடைந்தவர்களின் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகவில்லை. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு […]

செய்தி

உலகின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடு – மூன்றாவது இடத்தில் இலங்கை

  • July 12, 2026
  • 0 Comments

உலகில் மூன்றாவது அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடாக இலங்கை மூன்றாவது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. நம்பியோவின் (Numbeo) ‘நாடு வாரியான போக்குவரத்து குறியீடு 2026 (Traffic Index by Country 2026 Mid-Year) அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை 254.5 என்ற போக்குவரத்து குறியீட்டு மதிப்பெண்ணைப் பதிவு செய்துள்ளது. இது, நைஜீரியா மற்றும் கோஸ்டாரிகாவுக்கு அடுத்த இடத்தில் அந்நாட்டை வைத்துள்ளது. இந்த பட்டியலில் வங்காளதேசம், கென்யா, எகிப்து, பெரு, ஈரான், இந்தியா மற்றும் கொலம்பியா ஆகிய […]

இலங்கை

கிழக்கில் காணிப் பிரச்சினை – தீர்வுக்கான பரிந்துரைகளை முன்வைக்கும் HEO அமைப்பு

  • July 12, 2026
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள மக்களின் காணிப் பிரச்சினைகளை முறையாக ஆவணப்படுத்தி, தீர்வுக்கான பரிந்துரைகளை முன்வைக்கும் பணிகளை Human Elevation Organization (HEO) தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. இதன் கீழ், பயிற்றப்பட்ட HEO தொண்டர்களால் பாதிக்கப்பட்ட மக்களின் காணிப் பிரச்சினைகள் தனித்தனியாக ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ பிரதேசத்தில் புளியங்குளம் விவசாய காணியை மீட்கும் நோக்கில் ஆவணப்படுத்தல்கள் இடம்பெற்று வருகின்றது. அதேபோன்று குச்சவெளி, தென்னை மரவாடி, புல்மோட்டை, முத்துநகர் போன்ற பகுதிகளைச் […]

இலங்கை

நம்பிக்கையில்லா பிரேரணையை சிறந்த முறையில் எதிர்கொள்வோம் – நீதி அமைச்சர்

  • July 12, 2026
  • 0 Comments

எதிர்கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணையை  சிறந்த முறையில் அரசாங்கமாக எதிர்கொள்வோம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு மற்றும் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் சிறந்த […]