அரசியல் இலங்கை செய்தி

சிறைச்சாலையைக்கூட நிர்வகிக்க முடியவில்லை: அரசுமீது எதிரணி விமர்சனக் கணை தொடுப்பு

  • August 3, 2026
  • 0 Comments

“சிறைச்சாலைக் கட்டமைப்பைக் கூட முறையாக நிர்வகிக்க முடியாத தேசிய மக்கள் சக்தியினரால் இந்நாட்டை முறையாக ஆள முடியுமா? அவர்களால் நிச்சயமாக முடியாது. அதனால்தான் அவர்கள் ஏதேச்சாதிகார வழியில் பயணிக்க முற்படுகின்றனர்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பாகச் சஜித் பிரேமதாச மேலும் கூறியதாவது: “மஹர சிறைச்சாலையிலும் தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது. சிறைச்சாலைகளைக் கூட இந்த ஆட்சியாளர்களால் முறையாக […]

இலங்கையில் பல பகுதிகளிலும் அடை மழை பெய்துவருகின்றது. மத்திய மாகாணத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது. இலங்கை செய்தி

இலங்கையில் கன மழை: வெள்ள அபாயம்

  • August 3, 2026
  • 0 Comments

இலங்கையில் பல பகுதிகளிலும் அடை மழை பெய்துவருகின்றது. மத்திய மாகாணத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால், மகாவலி, களனி மற்றும் களு கங்கை ஆகியவற்றின் மேல்பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் […]

உலகம்

நைஜீரியாவில் ஆயுதமுனையில் கடத்தப்பட்ட பெண்கள் – 12 பேர் கொலை

  • August 3, 2026
  • 0 Comments

நைஜீரியாவின் வடமேற்கு சொகோட்டோ (Sokoto) மாநிலத்தில் உள்ள கிராமத்தின்மீது ஆயுதம் ஏந்திய நபர்கள் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதுடன், பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் ஒரு குடும்பத்தின் வீட்டிற்குத் தீ வைத்ததில், அக்குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் தீயில் கருகி உயிரிழந்ததாக அப்பகுதிவாசி ஒருவர் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் லஜிங்கே கிராமத்திற்குள் நுழைந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் […]

ஐரோப்பா

ரஷ்யா மீது உக்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதல் – குறைந்தது 08 பேர் உயிரழப்பு

  • August 3, 2026
  • 0 Comments

ரஷ்யாவில் கடந்த இரண்டு நாட்களாக உக்ரைன் முன்னெடுத்த ட்ரோன் தாக்குதல்களில் குறைந்தது 08 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை விற்பனையாளரான வைல்ட்பெர்ரீஸுக்குச் சொந்தமான கிடங்கு உள்ளிட்ட இலக்குகளை மையமாகக் கொண்டு இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நேற்று இரவு மாத்திரம் 635 உக்ரேனிய ஆளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக விளையாட்டு மைதானத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் 13 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாகவும், மேலும் இரு […]

இலங்கை

மூதுரில் சோகம் – பிரான்ஸ் செல்ல இருந்த இளைஞர் விபத்தில் சிக்கி மரணம்

  • August 3, 2026
  • 0 Comments

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் – ஜின்னாநகர் (59ஆம் கட்டை) பகுதியில் இன்று நேற்று மாலை (02) இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் ரிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மூதூர் – கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் தனேஸ் (வயது21) மற்றும் அருணவன் செல்வரெத்தினம் (வயது ) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் ஒருவர் […]

உலகம்

ஈரானுடன் மீண்டும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை – ட்ரம்ப் அறிவிப்பு

  • August 3, 2026
  • 0 Comments

06 மாதங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவரும் நடவடிக்கையின் மற்றொரு பகுதியாக ஈரானுடன் புதிய சுற்று பேச்சுவாரத்தைகளை தொடங்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ட்ரம்ப் புதிய பேச்சுவார்த்தைகளை அறிவித்ததைத் தொடர்ந்து, இன்றைய தினம் ஆசியாவில்  எண்ணெய் விலைகள் சரிந்தன. இதற்கமைய வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் பீப்பாய் ஒன்றின் விலை, 4.7 சதவீதம் சரிந்து 80.72 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது. முன்னதாக ஒப்பந்தம் ஒன்று எட்டப்படும்வரை ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்திவைப்பதாகவும் அவர் அறிவித்திருந்தார். […]

உலகம்

ஜப்பானிய யென்னின் மதிப்பு கூடுவதற்கு அமெரிக்கா பங்களிப்பு

  • August 2, 2026
  • 0 Comments

சர்வதேச சந்தையில் ஜப்பான் யென்னின் மதிப்பு கூடுவதற்கு அமெரிக்க கணிசமாக பங்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், ஜப்பானுடனான நட்பின் அடையாளமாகவும், உலகப் பொருளாதாரத்திற்கு உதவுவதற்காகவும், யென்னின் மதிப்பு கூடுவதற்கு அமெரிக்கா கைக்கோர்த்ததாக தெரிவித்துள்ளார். “அவர்கள் சிறிதளவு உதவியை விரும்பினார்கள், நாங்கள் எப்போதும் ஜப்பானுக்குத் துணையாக இருப்போம்,” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நிச்சயமாக பேர்ல் ஹார்பர் சம்பவத்தைத் தவிர, ஜப்பான் எப்போதும் எங்களுக்கு மிகவும் நல்லதாகவே இருந்துள்ளது எனக் கூறிய ட்ரம்ப் அது […]

ஐரோப்பா

கிரீஸில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரு ஹெலிகாப்டர்கள் விபத்து

  • August 2, 2026
  • 0 Comments

ஏதென்ஸுக்கு மேற்கே இரண்டு தீயணைப்பு ஹெலிகாப்டர்கள்  ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. வரலாறு காணாத வெப்ப அலை காரணமாக கிரீஸ் காட்டுத்தீயுடன் போராடி வருகின்றது. இந்நிலையில் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரு ஹெலிகாப்டர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. தீயணைப்புத் துறையால் வாடகைக்கு எடுக்கப்பட்டு, நான்கு பணியாளர்களுடன் பயணித்த இரண்டு பெல் ஹெலிகாப்டர்கள், ப்சாதா  (Psatha) பகுதியில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது நடுவானில் மோதிக்கொண்டதாக தீயணைப்புத் துறை தெரிவித்தது. பணியாளர்களைக் கண்டுபிடிப்பதற்காக தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டன. […]

ஐரோப்பா

அணுமின் நிலையத்தை மூடும் ஹங்கேரி – மின்விநியோகத் தடை

  • August 2, 2026
  • 0 Comments

40 ஆண்டுகளில் முதல் முறையாக ஹங்கேரி தனது அணுமின் நிலையத்தை மூடியுள்ளது. புதிய வெப்ப அலை உருவாகும் அபாயம் உள்ள நிலையில், டானூப் நதி வறண்டு வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஹங்கேரி ஒரு நெருக்கடியான   நாட்களை எதிர்கொள்கிறது என்று பிரதமர் பீட்டர் மாக்யார்  (Peter Magyar) இன்று தெரிவித்தார். இதற்கமைய ஹங்கேரியில் 05 நாட்களுக்கு மின் விநியோகம் தடைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவின் பெரும் பகுதிகள் நீடித்த வெப்பம் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. […]

இலங்கை

திருகோணமலையில் சோகம் – யானை தாக்கியதில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் பலி

  • August 2, 2026
  • 0 Comments

திருகோணமலை- சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோமபுர பகுதியில் யானையின் தாக்குதலினால் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி இன்று (02) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். சேருநுவர-சோமபுர பகுதியிலுள்ள வன ஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து கடமையாற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடந்த 30 ஆம் திகதி யானை மின் வேலி பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தபோது யானையின் தாக்குதலினால் படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து இவர் திருகோணமலை […]