ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் நகருக்குத் தெற்கே உள்ள கடற்கரைப் பகுதியில், சுமார் 50 'கிரேட்டர் கிரெஸ்டட் டெர்ன்' (greater crested terns) வகை கடல் பறவைகள் H5N1 பறவைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளன. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பறவைக் காய்ச்சல்: ஆஸ்திரேலியாவில் செத்து மடியும் கடற்பறவைகள்

  • August 3, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் நகருக்குத் தெற்கே உள்ள கடற்கரைப் பகுதியில், சுமார் 50 ‘கிரேட்டர் கிரெஸ்டட் டெர்ன்’ (greater crested terns) வகை கடல் பறவைகள் H5N1 பறவைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளன. நாட்டில் பறவைகள் முதன்முறையாக இவ்வாறு பெருமளவில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்நோய் மேலும் பரவக்கூடும் என்று ஆஸ்திரேலிய அரசு எச்சரித்துள்ளது. இருப்பினும், கடந்த ஜூன் மாதம் இந்நோய் முதன்முதலில் கண்டறியப்பட்டது முதல் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலியப் பண்ணைகளில், இந்த வைரஸ் பரவியதற்கான எந்த […]

கேரளா முழுவதும் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதுடன், 7 பேர் காணாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் திங்கட்கிழமை தெரிவித்தார். இந்தியா செய்தி

கேரளாவில் கனமழைக்கு 15 பேர் பலி: எழுவர் மாயம்

  • August 3, 2026
  • 0 Comments

கேரளா முழுவதும் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதுடன், 7 பேர் காணாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் திங்கட்கிழமை தெரிவித்தார். கனமழை நீடித்து வரும் நிலையில், மாநிலத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திங்கள்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 11,018 பேருக்கு அடைக்கலம் அளிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 316 நிவாரண முகாம்கள் இயங்கி வருவதாக, உயர் அதிகாரிகளுடன் வெள்ள நிலைமையை […]

இந்திய எல்லைப் பகுதிகளில், சீனாவிடம் இருந்து பெறப்பட்ட 'SH-15' என்ற சக்கரங்களால் இயங்கும் அதிநவீன பீரங்கிகளை (Wheeled Self-propelled Artillery Guns) பாகிஸ்தான் அதிக அளவில் களமிறக்கியுள்ளது. இந்தியா செய்தி

இந்திய எல்லையில் சீன தயாரிப்பு SH-15 பீரங்கிகளை களமிறக்கிய பாகிஸ்தான்

  • August 3, 2026
  • 0 Comments

இந்திய எல்லைப் பகுதிகளில், சீனாவிடம் இருந்து பெறப்பட்ட ‘SH-15’ என்ற சக்கரங்களால் இயங்கும் அதிநவீன பீரங்கிகளை (Wheeled Self-propelled Artillery Guns) பாகிஸ்தான் அதிக அளவில் களமிறக்கியுள்ளது. சீனாவின் ‘நொரின்கோ’ (Norinco) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த 155mm 52-காலிபர் பீரங்கி அமைப்பு, சீனாவில் PCL-181 என்று அழைக்கப்படுகிறது. பாகிஸ்தான் 2019-ஆம் ஆண்டில் சீனாவிடம் 236 SH-15 பீரங்கிகளுக்கான ஆர்டரை வழங்கியது. இதன் விநியோகம் 2022-இல் தொடங்கியது. மேலும், தொழில்நுட்பப் பரிமாற்ற (ToT) ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தானின் ‘ஹெவி […]

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று, அத்துறைக்குப் பொறுப்பான நீதி அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வலியுறுத்தியுள்ளார். இலங்கை செய்தி

மஹர சிறைச்சாலை சம்பவம்: நீதி அமைச்சருக்கு மீண்டும் நெருக்கடி

  • August 3, 2026
  • 0 Comments

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று, அத்துறைக்குப் பொறுப்பான நீதி அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: “நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் போது, இலங்கை வரலாற்றிலேயே முதன்முறையாக 10 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்தனர். அதேபோன்று 20 கைதிகளும் பலியானார்கள். இவ்வளவு பெரிய சம்பவம் நடந்த பிறகும் கூட, சிறைச்சாலைகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை […]

இலங்கை

நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களில் பாடசாலைகள் மூடல்

  • August 3, 2026
  • 0 Comments

நிலவும் மோசமான வானிலை காரணமாக, நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களின் கீழ் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று (03) மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே மத்திய மாகாணங்களில் நிலவும் வானிலையை கருத்தில் கொண்டு பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்பதை தீர்மானிக்க அதிபர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்ற நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இலங்கை செய்தி

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு

  • August 3, 2026
  • 0 Comments

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்ற நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று உபரிநீர் வழித்தடங்கள் இன்று (03) திங்கட்கிழமை காலை தானாகவே திறக்கப்பட்டுள்ளன என நீர்த்தேக்கப் பொறியாளர்கள் தெரிவித்தனர். தற்போது காணப்படும் மோசமான மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தால் மீதமுள்ள வான் கதவுகளும் தானாகவே திறக்கப்படலாம் எனவும், […]

இலங்கை

கேகாலையில் இரு பேருந்துகள் மோதி கோர விபத்து – 20 பயணிகள் படுகாயம்

  • August 3, 2026
  • 0 Comments

கேகாலையில் இன்று காலை இரு பேருந்துகள் மோதி பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. கேகாலையில் உள்ள கரண்டுபான சந்திப்பில் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) பேருந்து ஒன்று தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 20 பயணிகள் காயமடைந்தததாகவும், அவர்கள் கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து கேகாலை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் டிரம்ப் ஈரானுடன் விரைவான ஒப்பந்தத்தை எட்டும் நம்பிக்கையில் புதிய தாக்குதல்களை நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலைகள் சரிந்தன. இதனால் பணவீக்கம் மற்றும் வட்டி விகித உயர்வு குறித்த கவலைகள் சற்று தணிந்து, திங்கள்கிழமை தங்கம் விலை உயர்வைக் கண்டது. உலகம் செய்தி

தணிந்த பதற்றம்: தங்கம் விலை உயர்வு; கச்சா எண்ணெய் விலை சரிவு

  • August 3, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் டிரம்ப் ஈரானுடன் விரைவான ஒப்பந்தத்தை எட்டும் நம்பிக்கையில் புதிய தாக்குதல்களை நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலைகள் சரிந்தன. இதனால் பணவீக்கம் மற்றும் வட்டி விகித உயர்வு குறித்த கவலைகள் சற்று தணிந்து, திங்கள்கிழமை தங்கம் விலை உயர்வைக் கண்டது. சர்வதேச சந்தையில் GMT 0210 மணி நிலவரப்படி, ஸ்பாட் தங்கம் (Spot gold) 0.4% உயர்ந்து அவுன்ஸ் ஒன்றுக்கு $4,055.76 ஆக விற்பனையானது. அமெரிக்க தங்க பியூச்சர்ஸ் (U.S. gold futures) […]

ஈரான் மீதான பிரம்மாண்டமான வான்வழித் தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாகத் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டுடான புதிய பேச்சுவார்த்தைகள் திங்கள்கிழமை (இன்று) தொடங்கும் என்று கூறியுள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரானுடன் இன்று பேச்சு: ட்ரம்ப் தகவல்

  • August 3, 2026
  • 0 Comments

ஈரான் மீதான பிரம்மாண்டமான வான்வழித் தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாகத் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டுடான புதிய பேச்சுவார்த்தைகள் திங்கள்கிழமை (இன்று) தொடங்கும் என்று கூறியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை Air Force On விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தாக்குதல் தீவிரமடைவதை அவர்கள் பார்த்ததால், அதன் பரிமாணத்தை அறிந்துகொண்டனர். நாங்கள் தற்போது பேச்சுவார்த்தை வடிவில் அவர்களிடம் உரையாடி வருகிறோம். இது நாளை பிற்பகல் தொடங்குகிறது” என்று கூறினார். முன்னதாக தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக […]

ஆஸ்திரேலியா சிட்னி நகரின் மையப்பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகே கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இருவர் படு காயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்தரேலியாவில் பயங்கரம்! எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகே சரிந்து விழுந்த கட்டிடம்

  • August 3, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா சிட்னி நகரின் மையப்பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகே கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இருவர் படு காயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை முற்பகல் 11 மணி அளவில் ‘அல்டிமோ’ (Ultimo) பகுதியில் இடிபாடு ஏற்பட்டதாக அவசர உதவிப் பிரிவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், சுவரும் கூரையும் இடிந்து அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் மீது விழுந்திருப்பதைக் கண்டறிந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 60 மற்றும் 30 வயதுடைய […]