உலகம்

பிறப்புரிமை, குடியுரிமையைக் கட்டுப்படுத்தும் புதிய நிர்வாக உத்தரவுகளில் ட்ரம்ப் கையெழுத்து

  • August 7, 2026
  • 0 Comments

பிறப்புரிமை,  குடியுரிமையைக் கட்டுப்படுத்தும் நிர்வாக உத்தரவொன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளார். ட்ரம்பின் குடியேற்ற ஒடுக்குமுறையில் பிறப்புரிமைக் குடியுரிமையைக் கட்டுப்படுத்துவது முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக கர்பிணி பெண்கள் பிரசவத்திற்காக வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா விசாக்களை பயன்படுத்தி அமெரிக்கா வருவதை குறிவைக்கிறது. இந்த விடயத்தை வெள்ளை மாளிகை பிறப்பு சுற்றுலா என்று அழைக்கிறது. இந்த முயற்சியை ட்ரம்ப் நிர்வாகம் முன்னதாகவே மேற்கொண்டிருந்தாலும் அதற்கு உச்சநீதிமன்றம் அரசியல் அமைப்பிற்கு அப்பாற்பட்டது எனக் கூறி […]

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிற பகைமை நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியே பயணிப்பதைத் தடுக்கும் வகையிலான சட்டமூலம் குறித்து ஈரானிய நாடாளுமன்றக் குழு பரீசிலித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஹேர்முஸ் வழியே பயணிக்க அமெரிக்க, இஸ்ரேல் கப்பல்களுக்கு தடை: ஈரான் வியூகம்

  • August 7, 2026
  • 0 Comments

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிற பகைமை நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியே பயணிப்பதைத் தடுக்கும் வகையிலான சட்டமூலம் குறித்து ஈரானிய நாடாளுமன்றக் குழு பரீசிலித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை மேற்கோள் காட்டி ஈரான் அரச ஊடகமொன்று மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த வரைவு சட்டமூலத்தின் பிரகாரம், விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை மீறும் கப்பல்களின் சரக்கு மதிப்பில் 20 சதவீதம் வரை அபராதமாக வசூலிக்கப்படும். இந்தச் சட்டமூலம் இன்னும் நிபுணர்களின் ஆய்வில் […]

உலகம் செய்தி

சிரியாவின் புறநகர்ப் பகுதியில் குண்டுவெடிப்பு – இருவர் பலி

  • August 7, 2026
  • 0 Comments

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதியில் நேற்று இரவு குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மினிபஸ்ஸில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் இருவர் கொல்லப்பட்டதாகவும் 14 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டமாஸ்கஸுக்கு வெளியே, பெரும்பாலும் ட்ரூஸ் மக்கள் வசிக்கும் ஜரமானா (Jaramana) பகுதியில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து, வெடித்துச் சிதறிய ஒரு வெள்ளை மினிபஸ்ஸின் சிதைவுகள் இழுத்துச் செல்லப்படுவதை சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காணொளிக்காட்சிகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த சம்பவத்திற்கு எந்த […]

இரத்தினபுரி – குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலை அடுத்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகதெரியவருகின்றது. இலங்கை செய்தி

குருவிட்ட சிறைச்சாலையிலும் பதற்றம்: கண்ணீர்புகை பிரயோகம் – படைகள் குவிப்பு

  • August 7, 2026
  • 0 Comments

இரத்தினபுரி – குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலை அடுத்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகதெரியவருகின்றது. நேற்றிரவு குருவிட்ட சிறைச்சாலையில் பதற்ற நிலையில் ஏற்பட்ட நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. இன்று காலை மீண்டும் சிறைச்சாலைக்குள் கைதிகளால் பதற்ற நிலை உருவாகியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது, சிறைச்சாலையின் மருத்துவமனை கைதிகளால் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக காவல்துறையினரால் கண்ணீர்புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் உடனடியாக […]

இலங்கையில் தொடரும் சிறைச்சாலை மோதல்: ஆறு கைதிகள் காயம் இலங்கை செய்தி

இலங்கையில் தொடரும் சிறைச்சாலை மோதல்: ஆறு கைதிகள் காயம்

  • August 7, 2026
  • 0 Comments

கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்றிரவு 10.40 மணியளவில் சிறைச்சாலையில் இருந்த கைதிகள் குழப்பங்களில் ஈடுபட்டதை அடுத்து மேலதிக காவல்துறையினர் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர். சம்பவத்திற்குக் காரணமாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைச் சுவருக்கு மேலாக வீசப்பட்ட போதைப்பொருள் பொதி ஒன்றை சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைப்பற்றியதை அடுத்து, […]

உலகம்

கியூபா மீது பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா

  • August 6, 2026
  • 0 Comments

கியூபா மீது அமெரிக்கா இன்றைய தினம் புதிய தடைகளை விதித்துள்ளது. அமெரிக்க கருவூலத் துறை இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சீனாவில் வசிக்கும் ஒருவர் மற்றும் ரஷ்யாவில் வசிக்கும் மற்றொருவர் உட்பட ஆறு கியூபர்கள் மற்றும் கியூபாவைத் தளமாகக் கொண்ட ஐந்து நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகத் தடை செய்யப்பட்டிருந்த மேலும் இரண்டு கியூபர்கள் மீதும் கூடுதல் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இலங்கை

பரீட்சை காலங்களில் பேரிடர் தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்

  • August 6, 2026
  • 0 Comments

புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை காலங்களின்போது ஏற்படும் சீரற்ற வானிலை தொடர்பில் அறியத்தருவதற்காக 05 சிறப்பு தொலைபேசி எண்கள் அறிவிக்கப்படவுள்ளதாக  பேரிடர் மேலாண்மை மையம் (டி.எம்.சி.)   தெரிவித்துள்ளது. பரீட்சைக் காலத்தில் தேவையான உதவிகளை உறுதி செய்வதற்காக, முப்படைகள் மற்றும் காவல்துறையின் தொடர்ச்சியான ஆதரவுடன் இந்தப் புதிய அமைப்பு செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், அவசரகால சூழ்நிலைகளில் மாணவர்கள் பரீட்சை மையங்களை அடைய போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கும், பரீட்சை வினாத்தாள்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதை […]

ஐரோப்பா

புலம்பெயர்ந்தோரால் தவிக்கும் செவுட்டா நகரத்திற்கு நிதி உதவி வழங்க பரிசீலனை

  • August 6, 2026
  • 0 Comments

செவுட்டா நகரத்திற்கு தேவையான நிதியுதவியை வழங்க ஐரோப்பிய ஆணையம் ஸ்பெயின் அதிகாரிகளுடன் விவாதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் சுமார் 72000 சட்டவிரோத குடியேறிகள் எல்லை தடுப்புகளை உடைத்துக்கொண்டு செவுட்டாவிற்குள் அத்துமீறி பிரவேசித்தனர். இதன்காரணமாக சுமார் 100 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பல குழந்தைகள் கைவிடப்பட்ட நிலையில் ஸ்பெயின் எல்லையில் தவிப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் செவுட்டா நகரகத்தில் கடுமையான மனிதாபிமான நெருக்கடிகள் தலைத்தூக்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே நிதியுதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஸ்பெயின் அதிகாரிகளுடன் விவாதித்து […]

இஸ்ரேலிய அரசாங்கம் அமைதியை விரும்புவதாகத் தெரியவில்லை - என்று துருக்கி வெளிவிவகார அமைச்சர் Hakan Fidan பகிரங்கமாக விமர்சித்துள்ளார். உலகம் செய்தி

அமைதியை விரும்பாத இஸ்ரேல்: துருக்கி கடும் விசனம்

  • August 6, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய அரசாங்கம் அமைதியை விரும்புவதாகத் தெரியவில்லை – என்று துருக்கி வெளிவிவகார அமைச்சர் Hakan Fidan பகிரங்கமாக விமர்சித்துள்ளார். சிரிய வெளிவிவகார அமைச்சருடன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பாலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தொடர் தாக்குதல்களை அவர் கண்டித்துள்ளார். குறிப்பாக, அமைதி உடன்படிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், காசா மற்றும் மேற்குக் கரையில் முன்னெடுக்கப்படும் ராணுவ நடவடிக்கைகள் இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவின் அமைதியற்ற போக்கையே வெளிப்படுத்துவதாகவும் துருக்கி வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலையும், […]

இலங்கை

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு  நீர்விநியோகம் துண்டிப்பு

  • August 6, 2026
  • 0 Comments

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு  நீர்விநியோகம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) அறிவித்துள்ளது. அதன்படி,   இன்று (06) இரவு 10.00 மணி முதல் நாளை (07) காலை 5.00 மணி வரை நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், நீர் விநியோகத் தடையின் போது, ​​முன்கூட்டியே போதுமான நீரைச் சேமித்து வைத்து, கிடைக்கும் […]