செய்தி

சிரியாவின் புறநகர்ப் பகுதியில் குண்டுவெடிப்பு – இருவர் பலி

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதியில் நேற்று இரவு குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மினிபஸ்ஸில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் இருவர் கொல்லப்பட்டதாகவும் 14 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டமாஸ்கஸுக்கு வெளியே, பெரும்பாலும் ட்ரூஸ் மக்கள் வசிக்கும் ஜரமானா (Jaramana) பகுதியில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து, வெடித்துச் சிதறிய ஒரு வெள்ளை மினிபஸ்ஸின் சிதைவுகள் இழுத்துச் செல்லப்படுவதை சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காணொளிக்காட்சிகள் வெளிப்படுத்தியுள்ளன.

இந்த சம்பவத்திற்கு எந்த அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை. பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி