ஆஸ்திரேலியாவில் பறவைக் காய்ச்சல் தீவிரம்: கோழிப் பண்ணைகள் முடக்கம்
ஆஸ்திரேலியா விக்டோரியா மாநிலத்தில் H5N1 பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கோழி மற்றும் பறவைப் பண்ணையாளர்கள் தங்கள் பறவைகளைப் பண்ணைகளுக்குள்ளேயே அடைத்து வளர்க்குமாறு (house their birds) கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே விருப்பத்தின் பேரில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த இந்த நடைமுறை, தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, 50-க்கும் மேற்பட்ட பறவைகளை வளர்க்கும் அனைவரும் இனி அவற்றைப் பண்ணைக்குள் பூட்டி வைக்க வேண்டும். நோய்ப் பரவலைத் தடுக்கும் நோக்கிலேயே அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் […]













