வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர்விநியோகம் துண்டிப்பு
வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர்விநியோகம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏழு மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று (06) இரவு 10.00 மணி முதல் நாளை (07) காலை 5.00 மணி வரை நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், நீர் விநியோகத் தடையின் போது, முன்கூட்டியே போதுமான நீரைச் சேமித்து வைத்து, கிடைக்கும் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், இந்தத் தற்காலிக நீர் விநியோகத் தடையால் நுகர்வோருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு NWSDB வருத்தம் தெரிவித்துள்ளது.




