அமெரிக்க-இஸ்ரேல் கூட்டமைப்புக்கு எதிரான தாக்குதல்கள் "எதிரி முழுமையாகத் தோற்கடிக்கப்படும் வரை" தொடரும் என்று ஈரானின் தேசிய பாதுகாப்பு உயர் கவுன்சிலின் செயலாளர் முகமது பாகர் ஜோல்கதர் (Mohammad Bagher Zolghadr) எச்சரித்துள்ளார். உலகம் செய்தி

கொல்லப்பட்ட குழந்தைகளுக்காக பழிவாங்குவோம்: ஈரானிய பாதுகாப்பு அதிகாரி சபதம்

  • July 25, 2026
  • 0 Comments

அமெரிக்க-இஸ்ரேல் கூட்டமைப்புக்கு எதிரான தாக்குதல்கள் “எதிரி முழுமையாகத் தோற்கடிக்கப்படும் வரை” தொடரும் என்று ஈரானின் தேசிய பாதுகாப்பு உயர் கவுன்சிலின் செயலாளர் முகமது பாகர் ஜோல்கதர் (Mohammad Bagher Zolghadr) எச்சரித்துள்ளார். மேலும், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் மற்றும் பாடசாலைக் குழந்தைகள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கப் போவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளதாக ஈரானின் அதிகாரப்பூர்வச் செய்தி நிறுவனமான ஐ.ஆர்.என்.ஏ (IRNA) செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் தெற்கு நகரமான மீனாப்பில் உள்ள சிறுமிகள் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலே […]

இந்தியா, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

சிஜேபி கோரிக்கைகள் ஏற்பு: டெல்லி போராட்டம் நிறைவு

  • July 25, 2026
  • 0 Comments

இந்தியா, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து, சிஜேபியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ் , மேற்படி அறிவிப்பை வெளியிட்டார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. […]

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் பயங்கரவாதம் தீவிரமடைந்து வருவதாக துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

மேற்கு கரையில் தீவிரமடையும் வன்முறை: இஸ்ரேல்மீது துருக்கி குற்றச்சாட்டு

  • July 25, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் பயங்கரவாதம் தீவிரமடைந்து வருவதாக துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்குகரை பகுதியில் பாலஸ்தீனர்கள்மீது இஸ்ரேல் ராணுவம் , ராணுவ நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. அப்பாவி மக்கள் கொல்லப்படும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுவருகின்றன. இந்நிலையில் துருக்கி வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கத்தின் தூண்டுதலின் பேரில் செயற்படும் பயங்கரவாதக் குடியேற்றவாசிகளால் வெள்ளிக்கிழமை நான்கு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்தக் கொலைகள் “இஸ்ரேலின் தொடர்ச்சியான இனப்படுகொலைக் கொள்கையின்” […]

இந்தியா முழுவதும் இளைஞர்கள் போராட்டம் உக்கிரமடைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் , தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இந்தியா செய்தி

போராட்டங்கள் உக்கிரம்: இந்திய கல்வி அமைச்சர் ராஜினாமா

  • July 25, 2026
  • 0 Comments

இந்தியா முழுவதும் இளைஞர்கள் போராட்டம் உக்கிரமடைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் , தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, டெல்லியில் சிஜேபி போராட்டக்களத்தில் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். “டெல்லி ஜந்தர் மந்தரிலும், நாடு முழுவதிலும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை தேசவிரோத சக்திகள் தங்கள் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டேன்;. மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு எனது ராஜினாமாவை பிரதமருக்கு அனுப்பியுள்ளேன்” என்று தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று […]

அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாநிலத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்திற்குப் பிறகு, 6 சிறுவர்கள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலரது உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டதாகவும் சட்ட அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர். உலகம் செய்தி

அமெரிக்காவில் அதிர்ச்சி: தீக்கிரையான வீட்டில் துப்பாக்கிக் காயங்களுடன் 6 சிறுவர்கள் உட்பட 8 பேர் சடலமாக மீட்பு

  • July 25, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாநிலத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்திற்குப் பிறகு, 6 சிறுவர்கள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலரது உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டதாகவும் சட்ட அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர். மிச்சிகன் ஏரியின் கிழக்குக் கரையில் உள்ள ‘கிராண்ட் ஹேவன் டவுன்ஷிப்’ (Grand Haven Township) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கிடைத்த தகவலையடுத்து, பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் நண்பகல் 12 மணிக்கு […]

இந்தியாவில் நாளாந்தம் 502 பேரை பலியெடுக்கும் 'வீதி விபத்து' இந்தியா செய்தி

இந்தியாவில் நாளாந்தம் 502 பேரை பலியெடுக்கும் ‘வீதி விபத்து’

  • July 25, 2026
  • 0 Comments

இந்தியாவில் கடந்த 2025 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 1.8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, நாட்டில் நாளொன்றுக்கு சராசரியாக 502 பேர் வீதி விபத்துகளால் உயிரிழக்கின்றனர். மாநில ரீதியாகப் பார்க்கும்போது, வீதி விபத்து உயிரிழப்புகளில் உத்தரப் பிரதேச மாநிலத்திலேயே மிக அதிகளவிலான உயர்வு பதிவாகியுள்ளது. அம்மாநிலத்தில் 2024 ஆம் ஆண்டில் 24,118 ஆக இருந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை, 2025 ஆம் ஆண்டில் 27,550 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில், பஞ்சாப் மாநிலத்தில் […]

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) முதன்மை அரசு வழக்கறிஞரான கரீம் கான் (Karim Khan) தீவிர நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறி, அவரைப் பதவியிலிருந்து நீக்க நீதிமன்றத்தின் உறுப்பு நாடுகள் வாக்களித்துள்ளதாக ICC தெரிவித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டு: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முதன்மை வழக்கறிஞர் பணிநீக்கம்

  • July 25, 2026
  • 0 Comments

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) முதன்மை அரசு வழக்கறிஞரான கரீம் கான் (Karim Khan) தீவிர நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறி, அவரைப் பதவியிலிருந்து நீக்க நீதிமன்றத்தின் உறுப்பு நாடுகள் வாக்களித்துள்ளதாக ICC தெரிவித்துள்ளது. பிரித்தானிய வழக்கறிஞரான கரீம் கான், நீதிமன்றத்தில் பணியாற்றிய இளநிலை பெண் வழக்கறிஞர் ஒருவருடன் பொருத்தமற்ற வகையில் பாலியல் உறவு வைத்திருந்தார் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பில் அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என நீதிமன்றத்தின் நிர்வாகக் குழுவின் தூதர்கள் கடந்த […]

ஆபிரகாம் உடன்படிக்கையின் (Abraham Accords) கீழ், சவூதி அரேபியா இஸ்ரேலுடன் தனது உறவைச் சீராக்கச் சம்மதித்தால் மட்டுமே அந்நாட்டுடனான சிவில் அணுசக்தி ஒப்பந்தம் முன்னோக்கிச் செல்லும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

சவூதி – அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம்: இஸ்ரேலை மையப்படுத்தி ட்ரம்ப் விதித்த புதிய நிபந்தனை

  • July 25, 2026
  • 0 Comments

ஆபிரகாம் உடன்படிக்கையின் (Abraham Accords) கீழ், சவூதி அரேபியா இஸ்ரேலுடன் தனது உறவைச் சீராக்கச் சம்மதித்தால் மட்டுமே அந்நாட்டுடனான சிவில் அணுசக்தி ஒப்பந்தம் முன்னோக்கிச் செல்லும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். ” இந்த ஒப்பந்தத்தைச் செய்வதற்கு, அவர்கள் மிகவும் வெற்றியடைந்துள்ள ஆபிரகாம் உடன்படிக்கையில் உறுப்பினராக இணைய வேண்டும் என்று மட்டுமே நான் கூறுகிறேன். ஆனால், இப்போது அவர்கள் அதைச் செய்வதற்கான நேரம் வந்துவிட்டது” என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். சவூதி அரேபியாவில் சிவில் […]

இலங்கையில் டெங்கு மரணங்கள் அதிகரிப்பு செய்தி

இலங்கையில் டெங்கு மரணங்கள் அதிகரிப்பு

  • July 25, 2026
  • 0 Comments

இலங்கையில் இவ்வருடம் இதுவரை டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்வடைந்துள்ளதுடன், அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கையும் 80 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 80 ஆயிரத்து 905 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் கடந்த 24 நாள்களில் மட்டும் 25 ஆயிரத்து […]

இம்மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் முக்கிய விடயங்களில் இணைந்து செயல்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளன. இலங்கை செய்தி

வெளிநாட்டு ராஜதந்திரிகளைச் சந்திக்க தமிழ் பேசும் கட்சிகள் திட்டம்

  • July 25, 2026
  • 0 Comments

இம்மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் முக்கிய விடயங்களில் இணைந்து செயல்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளன. இதற்கமைய, மேற்படி கட்சிகள் தத்தமது சுயாதீனம், அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் கொள்கைகளைப் பாதுகாத்துக் கொண்டு, பொதுவான இணக்கப்பாடு காணப்படும் விடயங்களில் தமிழ் பேசும் மக்களின் நலனுக்காக ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயல்பட இணக்கம் தெரிவித்துள்ளன. நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதே இம்முடிவு […]