உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டு: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முதன்மை வழக்கறிஞர் பணிநீக்கம்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) முதன்மை அரசு வழக்கறிஞரான கரீம் கான் (Karim Khan) தீவிர நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறி, அவரைப் பதவியிலிருந்து நீக்க நீதிமன்றத்தின் உறுப்பு நாடுகள் வாக்களித்துள்ளதாக ICC தெரிவித்துள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) முதன்மை அரசு வழக்கறிஞரான கரீம் கான் (Karim Khan) தீவிர நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறி, அவரைப் பதவியிலிருந்து நீக்க நீதிமன்றத்தின் உறுப்பு நாடுகள் வாக்களித்துள்ளதாக ICC தெரிவித்துள்ளது.

பிரித்தானிய வழக்கறிஞரான கரீம் கான், நீதிமன்றத்தில் பணியாற்றிய இளநிலை பெண் வழக்கறிஞர் ஒருவருடன் பொருத்தமற்ற வகையில் பாலியல் உறவு வைத்திருந்தார் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இவ்விவகாரம் தொடர்பில் அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என நீதிமன்றத்தின் நிர்வாகக் குழுவின் தூதர்கள் கடந்த மாதம் பரிந்துரை முன்வைத்துள்ளனர்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் 125 உறுப்பு நாடுகளில் பெரும்பாலான நாடுகள் அந்தப் பரிந்துரைக்கு
வெள்ளிக்கிழமையன்று ஆதரவாக வாக்களித்தன.

“வழக்கறிஞருமான கரீம் கான் தீவிர நடத்தை மீறல் மற்றும் கடமை தவறிய செயல்களில் ஈடுபட்டதால், அவரைப் பதவியிலிருந்து நீக்க 82 உறுப்பு நாடுகள் பெரும்பான்மையுடன் தீர்மானித்துள்ளன” என்று நீதிமன்ற நிர்வாகக் குழுவின் தலைவர் பைவி கௌகொரந்தா (Paivi Kaukoranta) தெரிவித்தார்.

56 வயதான கரீம் கான் தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.

வாக்கெடுப்பிற்குப் பிறகு கரீம் கானின் வழக்கறிஞர் தாயப் அலி கூறுகையில், ” கான் இந்த முடிவின் சட்டப்பூர்வ தன்மையையும் நியாயத்தையும் அனைத்து சட்ட வழிகள் மூலமாகவும் எதிர்த்துப் போராடுவார்” என்றார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி