இந்தியா உலகம்

கப்பல் விவகாரம்: அமெரிக்காவிடம் இந்தியா கேள்வி எழுப்ப வேண்டும் என்கிறது ஈரான்!

  • March 7, 2026
  • 0 Comments

“ இந்திய பெருங்கடலில் ஈரானிய கப்பல்களை தாக்குவது ஏன் என்று அமெரிக்காவிடம் இந்தியா கேள்வி எழுப்ப வேண்டும்.” இவ்வாறு ஈரான் பிரதி வெளிவிவகார அமைச்சர் சயீத் கதிப்சாதே Saeed Khatibzadeh கோரிக்கை விடுத்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற ரெய்சினா மாநாட்டில் ஈரான் சார்பில் அவர் பங்கேற்றிருந்தனர். இதன்போது இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “கிரேட்டர் இஸ்ரேல் என்ற போலி பிம்பத்தை கட்டமைக்கவே இந்த போர் நடைபெறுகிறது. இதை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரே வழி […]

இலங்கை செய்தி

ஈரான் கப்பல் விடயத்தில் இந்தியாமீது பழிசுமத்த கூடாது: செல்வம் எம்.பி.

  • March 7, 2026
  • 0 Comments

“இந்து சமுத்திரத்தில் இலங்கை கடற்பரப்புக்கு அப்பாலுள்ள சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க போர்க்கப்பல் தாக்குதலுக்கு இலக்கான சம்பவம் தொடர்பில் இந்தியாவை குற்றஞ்சாட்டக் கூடாது.” இவ்வாறு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் Selvam Aadikalanathan தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. இவ்வாறு கூறினார். “ஈரான் போர்க் கப்பல் இலங்கைக்கு அருகில் தாக்கப்பட்ட விவகாரத்துக்கு இந்தியாவே பொறுப்பு என்றெல்லாம் சிலர் கருத்துகளை முன்வைக்கின்றனர். இது ஏற்புடைய கருத்து அல்ல. இலங்கைக்கு ஆபத்து […]

இலங்கை செய்தி

அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

  • March 7, 2026
  • 0 Comments

எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி Minister Kumara Jayakody மீது கொழும்பு மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இதற்குரிய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. 2016 ஆம் ஆண்டு அரசுக்குச் சொந்தமான ‘லங்கா’ உர நிறுவனத்தின் துணை கொள்வனவு முகாமையாளராக குமார ஜயக்கொடி Kumara Jayakody பணியாற்றிய காலத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பாகவே, அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவர்,கொள்வனவின் போது, தனியார் நிறுவனம் ஒன்று சட்டவிரோதமாக நன்மை பெற உதவியதாக, […]

உலகம்

ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் ரஷ்யா? உளவு தகவல் வழங்கியது யார்?

  • March 7, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் இலக்குகளை தாக்குவதற்கு தேவையான உளவுத் தகல்களை ரஷ்யா, ஈரானுக்கு வழங்கி வருகின்றது என தகவல் வெளியாகியுள்ளது. எனினும், மேற்படி உளவு தகவல்களால் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்கு எவ்வித தாக்கமும் ஏற்படவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அத்துடன், ஈரானின் ராணுவத் திறன் முறியடிக்கப்பட்டுவருகின்றது எனவும் அறிவித்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்குரிய ட்ரோன்களை ஈரான் வழங்கிவருகின்றது. இதற்கு பிரதி உபகாரமாகவே ரஷ்யா உளவு தகவல்களை வழங்கியுள்ளது எனக் கூறப்படுகின்றது. எனினும், […]

ஆஸ்திரேலியா செய்தி

மத்திய கிழக்கிலுள்ள ஆஸ்திரேலியர்களை மீட்க விசேட ஏற்பாடு!

  • March 7, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள தமது நாட்டு பிரஜைகளை பாதுகாப்பாக மீட்பதற்கு ஆஸ்திரேலிய Australian அரசாங்கம் புதிய போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இராஜதந்திர முயற்சிகளின் விளைவாக கத்தார் தலைநகர் தோஹாவிலிருந்து Doha சவுதி அரேபியாவின் ரியாத் Riyadh நகருக்கு விசேட பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன, அங்கிருந்து வணிக விமானங்கள்மூலம் ஆஸ்திரேலியர்கள் தாயகம் திரும்ப முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பற்ற சூழலைக் கருத்தில் கொண்டு, குவைத், லெபனான் மற்றும் பஹ்ரைன் […]

உலகம் செய்தி

பாரிய வன்வழித் தாக்குதலை முறியடித்தது சவூதி!

  • March 7, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவின் பாதுகாப்புப் படைகள் அந்நாட்டின் முக்கிய எரிசக்தி மற்றும் இராணுவ நிலைகளை குறிவைத்து ஈரானால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்துள்ளன. ஷைபா எண்ணெய் வயல் பகுதியை நோக்கி ஏவப்பட்ட ஆறு ஆளில்லா விமானங்கள் மற்றும் இளவரசர் சுல்தான் விமானப்படை தளத்தை இலக்கு வைத்த ballistic m ஏவுகணை ஆகியவை இடைமறித்து அழிக்கப்பட்டன. உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த எண்ணெய் தளம் நாளொன்றுக்கு பத்து லட்சம் பேரல் கச்சா எண்ணெயை உற்பத்தி […]

அரசியல் இலங்கை

மொட்டு கட்சியை கட்டியெழுப்ப மஹிந்த அணி வியூகம்!

  • March 7, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை கிராமிய மட்டத்தில் மேலும் வலுப்படுத்தி, மாகாணசபைத் தேர்தலில் அமோக வெற்றியை பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் SLPP அரசியல் குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச Mahinda Rajapaksa தலைமையில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது. பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது. இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் சிரேஷ்ட பேராசிரியர் வணக்கத்துக்குரிய உதுராவல தம்மரதன தேரர், கட்சியின் தேசிய […]

இலங்கை செய்தி

உரிய மீளாய்வின் பின்னரே வடக்கில் காணி விடுவிப்பு!

  • March 7, 2026
  • 0 Comments

” இராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த காணிகள் உரிய மீளாய்வின் பின்னர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையிலேயே விடுவிக்கப்படுகின்றது.” இவ்வாறு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருன ஜயசேகர Aruna Jayasekara தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பான பிரேரணைமீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். “ யாழ்.பாதுகாப்பு படை தலைமையகம் அகற்றப்படுவுள்ளது என சில வாரங்களுக்கு முன்னர் வதந்தி பரப்பட்டது. பாரிய […]

இலங்கை செய்தி

இந்திய, இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு!

  • March 6, 2026
  • 0 Comments

இந்தியா Indian மற்றும் இலங்கை Sri Lankan வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று புது டெல்லியில் இன்று (06) மாலை இடம்பெற்றுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் நேற்று மாலை புதுடெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். இந்நிலையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

ஈரான் சரணடைந்தால் மட்டுமே பேச்சு: ட்ரம்ப் திட்டம்!

  • March 6, 2026
  • 0 Comments

நிபந்தனையற்ற சரணடைவுக்கு இணங்கினால் மட்டுமே ஈரானுடன் பேச்சு நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இவ்வாறு நடந்து தகுதியான தலைமையை ஏற்றுக்கொண்டால் ஈரானை பொருளாதார ரீதியாக மேம்படுத்த உதவி வழங்கப்படும் எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார். ஈரானின் தற்போதைய இக்கட்டான நிலையை மாற்றி, நட்பு நாடுகளுடன் இணைந்து அந்நாட்டை வலிமையான தேசமாக மாற்றுவதே தனது நோக்கம் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, சரணடைவதற்கு தயாரில்லை என ஈரான் ஏற்கனவே அறிவித்துள்ளது.

error: Content is protected !!