கேப் வெர்டே தீவுகளுக்கு சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம் – 25 பேர் பலி
அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள கேப் வெர்டே தீவுகளில் Cape Verde’s islands ஒன்றான ஃபோகோவில் Fogo இடம்பெற்ற பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
பேருந்து செங்குத்தான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபோகோவில் Fogo நேற்று இரவு மலைப்பாதையில் பேருந்து பயணித்தபோது எதிர்பாராத விதமாக இந்த அனர்த்தம் நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துக்குள் பெரும்பாலும் சுற்றுலாச் சென்ற பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
காயமடைந்த பல பயணிகள் ஃபோகோவில் உள்ள சாவோ பிரான்சிஸ்கோ டி அசிஸ் பிராந்திய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இதேவேளை இந்த சுற்றுலா பயணம் பாடசாலை நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும், இது ஓட்டுநரால் தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிந்ததாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.




