NPPஆட்சியில் சிறந்த வெளிவிவகாரக் கொள்கை கடைபிடிப்பு
“அனைத்து நாடுகளுடனும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறந்த உறவைப் பேணி வருகின்றது. சர்வதேச அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படவில்லை” என்று ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: “தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் சர்வதேச தொடர்புகள் இருக்காது என்றும், நாடு தனிமைப்படுத்தப்படும் என்றும் தேர்தல் காலத்தில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இன்று அனைத்து நாடுகளுடனும் எமது அரசாங்கம் சிறந்த உறவைப் பேணி வருகின்றது. தெற்காசியாவில் அனைத்து நாடுகளும் நேசிக்கும் […]













