உலகம் செய்தி

ராணுவ நடவடிக்கைகளுக்கு தடை: அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம்!

  • June 4, 2026
  • 0 Comments

ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு ஆதரவாக அமெரிக்க பிரதிநிதிகள் சபை (House of Representatives) வாக்களித்துள்ளது. ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்த வார இறுதியில் நல்லதொரு முன்னேற்றம் ஏற்படக்கூடும் என ஜனாதிபதி டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ள நிலையிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸின் (அமெரிக்க நாடாளுமன்றம்) அனுமதி பெறாமல் ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ஜனநாயகக் கட்சியினரால் கொண்டு வரப்பட்ட ‘போர் அதிகாரத் தீர்மானத்திற்கு’ ஆதரவாக பிரதிநிதிகள் சபை வாக்களித்துள்ளது. […]

உலகம் செய்தி

லெபனான், இஸ்ரேலுக்கிடையில் புதிய போர் நிறுத்த ஒப்பந்தம்!

  • June 4, 2026
  • 0 Comments

லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு தனது தாக்குதல்களை முழுமையாக நிறுத்த வேண்டும் என்றும், எல்லைப் பகுதியிலிருந்து தனது படைகளை வெளியேற்ற வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. லெபனான் ராணுவம் குறிப்பிட்ட பகுதிகளில் முழுமையான கட்டுப்பாட்டை எடுப்பதற்கு அமெரிக்கா உதவி செய்யும், இதன் மூலம் ஆயுதக்குழுக்களின் ஆதிக்கம் குறைக்கப்படும். எனினும், இரு […]

இலங்கை செய்தி

குவைத் விமான நிலையம்மீது தாக்குதல்: மூன்று இலங்கையர்கள் காயம்!

  • June 4, 2026
  • 0 Comments

குவைத் சர்வதேச விமான நிலையம்மீது ஈரான் நேற்று நடத்திய ட்ரோன் தாக்குதலில் மூன்று இலங்கையர்களும் காயமடைந்துள்ளனர். குவைத்திலுள்ள இலங்கைத் தூதுரகம் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. மூவருக்கும் லேசான காயங்களே ஏற்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த மூன்று இலங்கையர்களும் அங்கு மின்தூக்கி பழுதுபார்க்கும் தொழில்நுட்ப வல்லுநர்களாகப் பணியாற்றிவந்துள்ளனர் என தெரியவருகின்றது. ஈரான் நேற்று நடத்திய மேற்படி தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 63 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ட்ரம்பின் புதிய வரி விதிப்புக்கு ஆஸ்திரேலியா கடும் எதிர்ப்பு!

  • June 4, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் சீனா உட்பட சுமார் 60 நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்க அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் கீழ் ஆஸ்திரேலியாவிற்கு 12.5 சதவீத வரி விதிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிரானது என்று ஆஸ்திரேலியா சுட்டிக்காட்டியுள்ளது. கட்டாயத் தொழிலாளர் முறையைத் தடுக்கத் தவறிய நாடுகள் தொடர்பில் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் நடத்திய விரிவான விசாரணையைத் தொடர்ந்து இந்தப் பொருளாதாரக் கட்டுப்பாடுகள் முன்மொழியப்பட்டுள்ளன. இதில் […]

இலங்கை செய்தி

செம்மணியில் 272 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

  • June 4, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது, சிறுவர்களினது எனச் சந்தேகிக்கப்படும் 4 எலும்புத் தொகுதிகள் உட்பட புதிதாக மேலும் 5 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 15ஆம் நாள் அகழ்வு நடவடிக்கைகள் நேற்றுப் புதன்கிழமை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, தடயவியல் நிபுணர்கள் முன்னிலையில் இடம்பெற்றது. அகழ்வின் போது சிறுவர்களினது எனச் சந்தேகிக்கப்படும் 4 எலும்புத் தொகுதிகள் […]

செய்தி விளையாட்டு

மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது இலங்கை அணி!

  • June 4, 2026
  • 0 Comments

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி, 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. ஜமைக்கா, கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 303 ஓட்டங்களைப் பெற்றது. குசல் மெண்டிஸ் 62 பந்துகளில் 72 ஓட்டங்களையும், பெதும் நிஸ்ஸங்க […]

செய்தி விளையாட்டு

2026 FIFA World cup: ஈரான் வீரர்களுக்கு கிடைத்தது விசா!

  • June 3, 2026
  • 0 Comments

2026 FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக, ஈரானிய தேசிய அணி வீரர்களுக்கும் , ஊழியர்களுக்கும் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மெக்சிகோ விசா வழங்கியுள்ளதை, துருக்கிக்கான ஈரான் தூதுவர் Mohammad-Hassan Habibollahzadeh உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவுடனான போர் பதற்றங்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, ஈரான் தனது பயிற்சி முகாமினை அரிசோனாவிலிருந்து மெக்சிகோ எல்லையில் உள்ள டிஜுவானா நகருக்கு மாற்றியுள்ளது. இந்த இடமாற்றத்திற்கு சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA ஒப்புதல் அளித்துள்ளது. ஈரான் தனது குழுநிலை ஆட்டங்களை அமெரிக்காவில் விளையாட […]

உலகம் செய்தி

நாட்டைவிட்டு வெளியேறுமாறு ஈரான் தூதரக அதிகாரிகளுக்கு குவைத் உத்தரவு!

  • June 3, 2026
  • 0 Comments

ஈரான் தூதரகத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேறுமாறு குவைத் வெளிவிவகார அமைச்சு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஈரானின் மூர்க்கத்தனமான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த அதிகாரிகள் ‘ஏற்றுக்கொள்ளத்தகாத நபர்களாக’ அறிவிக்கப்பட்டுள்ளனர். அடுத்த 24 மணி நேரத்திற்குள் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று குவைத் அரசு மிகக் கடுமையான காலக்கெடுவை விதித்துள்ளது. குவைத் சர்வதேச விமானநிலையம்மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார். 60 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த விவகாரம் […]

உலகம் செய்தி

ஈரான் தாக்குதலில் குவைத்தில் இந்தியர் பலி: 60 இற்கு மேற்பட்டோர் காயம்!

  • June 3, 2026
  • 0 Comments

குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார். 60 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேற்படி தாக்குதலை “ஈரானின் குற்றவியல் ஆக்கிரமிப்பு” என குவைத் பாதுகாப்பு அமைச்சு கண்டித்துள்ளது. ஈரானிய எண்ணெய் கப்பல் மற்றும் கெஷ்ம் தீவுமீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே மேற்படி தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது. மேலும் வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களையும் தாம் இலக்கு வைத்ததாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்த புதிய பதற்றநிலையானது அமெரிக்கா […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

மாநிலங்களவை இடத்தை காங்கிரசுக்கு ஒதுக்கியது தவெக!

  • June 3, 2026
  • 0 Comments

தமிழகத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தெரிவித்தார். இந்தியா முழுவதும் மாநிலங்களவை எம்.பி.க்கள் 24 பேரின் 6 ஆண்டு பதவிக் காலம் 2026 ஜூன், ஜூலையில் முடிவடைகிறது. இதனால், அந்த இடங்களுக்கு ஜூன் 18ஆம் திகதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சி.வி.சண்முகம் உட்பட 3 பேர் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால், 3 இடங்களுக்கு அதே […]