இந்திய நிதியை வடக்கில் எவ்வாறு பயன்படுத்தபோகின்றது அரசு?
“காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலைய அபிவிருத்திகளுக்காக இந்தியா நிதியுதவி வழங்கியுள்ளது. எனினும், அந்நிதி இதுவரை பயன்படுத்தப்படாமல் உள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்நிதியைப் பயன்படுத்தி அபிவிருத்திகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்” என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி. பெரேரா தெரிவித்ததாவது: “நாட்டில் மீண்டும் ஒரு […]













