உலகம்

நேபாளத்தில் இணையவழி துன்புறுத்தல் – பிரதமர் சிறப்பு உத்தரவு

நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இணையவழி மூலம் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதை  கட்டுப்படுத்த நேபாளப் பிரதமர் பலேந்திர ஷா Balendra Shah  உத்தரவிட்டுள்ளார்.

இந்த வெள்ளப்பெருக்கால் கிட்டத்தட்ட 1,400 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4000 பேர் காணாமல்போயுள்ளனர்.

இந்நிலையில் பெண்கள் மற்றும் சிறுபான்மை இனக் குழுக்களை இலக்காகக் கொண்ட இணையவழித் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அவ்வாறான துன்புறுத்தல்களை விசாரணை செய்ய 10 பேர் கொண்ட இணையப் பாதுகாப்புப் புலனாய்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இவ் அமைப்பினரால் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன உறவினர்களுக்காக உயிர் பிழைத்தவர்கள் சமூக ஊடகங்களில் வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து இணையவழித் துன்புறுத்தல்கள் ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

 

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்