நேபாளத்தில் இணையவழி துன்புறுத்தல் – பிரதமர் சிறப்பு உத்தரவு
நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இணையவழி மூலம் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதை கட்டுப்படுத்த நேபாளப் பிரதமர் பலேந்திர ஷா Balendra Shah உத்தரவிட்டுள்ளார்.
இந்த வெள்ளப்பெருக்கால் கிட்டத்தட்ட 1,400 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4000 பேர் காணாமல்போயுள்ளனர்.
இந்நிலையில் பெண்கள் மற்றும் சிறுபான்மை இனக் குழுக்களை இலக்காகக் கொண்ட இணையவழித் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
அவ்வாறான துன்புறுத்தல்களை விசாரணை செய்ய 10 பேர் கொண்ட இணையப் பாதுகாப்புப் புலனாய்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இவ் அமைப்பினரால் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன உறவினர்களுக்காக உயிர் பிழைத்தவர்கள் சமூக ஊடகங்களில் வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து இணையவழித் துன்புறுத்தல்கள் ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.



